Ad Widget

சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம், இளைஞன் தலைமறைவு!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில் வசித்த அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சிறுதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குறித்த சம்பவம் இருவாரங்களுக்கு முன் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியின் விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பொலீஸார் சிறுமியை மீட்டுள்ளதோடு சந்தேக நபரான தலைமறைவாகியுள்ள இளைஞனையும் தேடி வருகின்றனர்.

Related Posts