Ad Widget

கோண்டாவில் பகுதியில் புகையிரதம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த மோகனராசா நிசாந்தன் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பரமநாதன் ரெஜராம் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் தொடரந்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts