- Sunday
- November 23rd, 2025
தனது மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த திருநெல்வேலி பனிக்கர் வீதியைச் சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 28) என்பவருக்கு, மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று தீரப்பளித்தார். 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 5 முறை கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தசாமி ஜெயன் என்பவர்...
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட்ட கருத்து குறித்து, அவரிடம் விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, 'பொலிஸாரால் எதிர்வரும் நாட்களில் இந்த விசாரணை நடத்தப்படும்' என்றார்.
சாவகச்சேரி பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்றைய தினம், நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடப்போவதாகவும் குறிப்பிட்டார். நிதி அமைச்சுக்கான புதிய கட்டடத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு...
ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கண்மூடித் தனமாகத் கொலைவெறித் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 7 தமிழ் மாணவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து இணங்காணப்பட்ட மேலும் சில பகுதிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியினை அண்மித்த பகுதிகள் குறிப்பாக நடேஸ்வராக் கனிஸ்ர வித்தியாலையத்தின் பின்புறத்தில் இருந்து இராணுவத்தின் தல்சவென கோட்டல் வரையிலான சில பகுதிகள் விடுவிப்பதற்கு படைத்தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது. முன்பு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள படை முகாம்களை...
சாவகச்சேரி - மறவன்புலோ பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டது அரசாங்கம், அரசாங்கத்தின் கீழ் உள்ளவர்களின் சதி திட்டம் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
காரைநகர், கசூரினா கடற்கரையில் ஆணொருவரின் சடலம் புதன்கிழமை (30) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். 5 அடி 4 அங்குலம் உயரமும், பொதுநிறமும், கறுப்பு நிற தலைமயிரும் பச்சை நிறத்தில் ஸ்ரீலங்கா என எழுத்துப் பொறிக்கப்பட்ட காற்சட்டை அணியப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. மேலும், கடற்கரையில் இருந்து மேலதிகமாக வெள்ளைச்சறமும், நீலச்சேட்டும் மீட்கப்பட்டது. ஆனால்,...
சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச்சந்தேகநபர் கூறியுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த...
அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தில் இருந்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மயிலை ஒரு கையிலும் துப்பாக்கியை மறு கையிலும் பிடித்தவாறு வௌியான குறித்த புகைப்படத்தில் இருந்த நபர் வென்னப்புவ - பொரலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த டப்ளியூ.பிரியந்த பிரணாந்து எனத் தெரியவந்துள்ளது. இவர் தற்போது இத்தாலியில் பணிபுரிந்து வருகின்றார்....
எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல்களுடன் தொடர்புபட்ட தடயங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படும் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டி சில்வா...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு அரசாங்கம் அமைத்துக் கொடுக்கவுள்ள 65,000 உருக்கு வீடுகள் தொடர்பான விஞ்ஞான ரீதியான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வதிவிடப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு நிதியுதவியுடன் வீடமைப்புத் திட்டம் ஒன்றினை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் முன்னரே தயாரிக்கப்பட்ட உருக்கு, பிளாஸ்டிக்...
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி ஆகியனவற்றை கண்டு பிடித்த பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. வெடிபொருட்களை கண்டு பிடித்து மீட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சுற்றி வளைப்பிற்கு காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் உயர்...
வட பகுதியெங்கும் பௌத்தர்களே இல்லாத இடங்களில் கூட அடாத்தாக பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சபை உறுப்பினர்கள், இவை திட்டமிட்ட இனத்துவ அடையாள அழிப்பின் நோக்கமே என்றும் குறிப்பிட்டுள்ளனர். முதலமைச்சருக்கும் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது நயினாதீவில் 62 அடி...
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்துக்குச் சொந்தமான காணியின் பின் பகுதியில் இருந்து, ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், குறித்த கமநல சேவைகள் நிலையத்துக்கு சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் இயங்கிவந்தது....
சாவகச்சேரி, மறவன்புலவில் மீட்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருள்கள் குறித்த தகவலை கைதானவரின் இரண்டாவது மனைவியே வழங்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று மேற்படி விடயத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. மறவன்புலவில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட தேடுதலில் வெடிபொருள்கள் சிக்கின. சந்தேகநபரை வன்னேரிக்குளத்தில் வைத்து பொலிஸார் கைது...
வடக்கில் எவ்வாறான அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் இராணுவத்தினர் தயார் நிலையில் இருக்கின்றனர் என யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். இந்நிலையில், முழுமையான விசாரணைகளின்...
சாவகச்சேரி பகுதியில் ஜெகட் இரண்டு, சீ நான்கு (பிளாஸ்டிக் வெடிபொருள்) பேக் மூன்று மற்றும் சிம் காட் ஐந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அரசாங்கம் முயற்சிப்பது உண்மையை மறைத்து இது குறித்து குறைந்த மதிப்பீடுகளை வழங்கவே எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால் இது உண்மை...
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கொழும்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதனை தமிழ் நாட்டில் இயங்கும் பல அமைப்புக்கள் எதிப்பு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் முருகசேனை என்னும் அமைப்பு விடுத்துள்ள கண்டண அறிக்கை... தனது இசை வளத்தின் மூலம் தமிழ் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் மதிமயக்கிய...
Loading posts...
All posts loaded
No more posts
