இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் தெல்லிப்பழையில் இயற்கை விவசாயம்!

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள மானிடம் இயற்றை விவசாயப் பண்ணையை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டதுடன் இதுபோன்ற இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் இராசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகளின் தாக்கத்தினால் மக்கள்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கான ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியை நிர்மாணிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்துக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தினூடாக (ஜய்கா) ஜப்பான் யென் 1,667,000,000 (அண்ணளவாக 2,100 மில்லியன் ரூபா) மானிய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் பயனுள்ள...
Ad Widget

யாழ் முயற்சியாளர் 2016 கண்காட்சி நிகழ்வு

உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி ஒன்றின் ஆரம்ப நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் அதற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் நடாத்தப்படும் இக்கண்காட்சியானது இன்றும்...

தமிழ் மக்கள் பேரவையின் வரைவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்!

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வின் முன்மொழிவு வரைவு தீர்வு திட்டம் இன்று ஏகமனதாக வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய வைத்திய கலாநிதி ப.லக்ஸ்மன் தெரிவித்தார். இதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் அச்சு பிரதிகளையும் மிக விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

தனியார் விவசாய நிறுவனங்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் -பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள்

வடக்கில் அண்மைக்காலமாகப் பல தனியார் நிறுவனங்கள் புதிய பயிரினங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். எழுதுமட்டுவாழ் பிரதேச கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (10.04.2016) நடைபெற்றது....

சேந்தாங்குளம் ஆலயத்திற்கு சொந்தமான 36 ஏக்கர் காணி படையினரால் விடுவிப்பு

யாழ்ப்பாணம் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான 36 ஏக்கர் காணி கடற்படையினரால் இன்று சனிிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சேந்தாங்குளத்திலுள்ள ஆலயத்திற்கு சொந்தமான குறித்த ஏக்கர் காணிகள் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தநிலையில், கத்தோலிக்க மக்கள் மற்றும் குருக்களின் எதிர்ப்பினால் குறித்த காணி விடுவிக்கப்பட்டதாக அருட்தந்தை ஜெ.ஏ.அருள்தாஸன் தெரிவித்தார். குறித்த காணியை...

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் ஆயுதக் கிளர்ச்சி ஏற்படும்!- ஜனாதிபதி எச்சரிக்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பதற்கான ஆயுதக் கிளர்ச்சிகள் மீண்டும் தலைதூக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும்...

வட மாகாணசபையின் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தை தூண்டிவிடுமாம்!

வட மாகாண சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு யோசனை தெற்கில் இனவாதத்தைத் தூண்டிவிடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். “யுத்தம் நிறைவுக்கு வந்து நாட்டில் நல்லிணக்கம் உருவாகி வரும் நிலையில் வட மாகாண சபை முன்மொழிந்துள்ள யோசனை காலத்துக்கு பொருத்தமற்றது.” என்றும் அவர்...

பேஸ்புக் மூலம் யுவதியை ஏமாற்றி நகைகளை அபகரித்த பொறியியலாளர் கைது!

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, பெண்ணொருவரை திருமணம் புரிவதாகக் கூறி ஏமாற்றி, அவரிடமிருந்து 4 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளையும், பணத்தையும் அபகரித்த பொறியியலாளர் ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வவுனியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன், 2012 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமாகிய குறித்த...

வரணியில் வாள்வெட்டு! பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயம்!

தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி மத்தியகல்லூரிக்கு அருகிலுள்ள வீதியூடாக குறித்த நால்வரும் பணித்துக்கொண்டிருக்கையில் இடைமறித்த குழு ஒன்று அவர்களை வாள்களால் வெட்டியதுடன் இரும்புக் கம்பிகளாலும் தாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

பொருத்து வீடுகள் எமக்கு வேண்டாம்! பொருத்தமான வீடுகளே வேண்டும்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத்திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியும், திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத்...

அரசின் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது! ஜேர்மன் எம்.பிகளிடம் யாழ். ஆயர் சுட்டிக்காட்டு!

புதிய அரசின் மீது வடக்கு மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தற்போது குறைந்து கொண்டு போகிறது என யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் அங்கத்தவர்காளான 9 பேர் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட்...

புத்தாண்டு காலத்தில் கண்களை பாதுகாத்துக்கொள்ள கோரிக்கை

சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அந்த சங்கம் கூறுகின்றது. அதன்காரணமாக பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார...

எங்களுடைய பலம் ஒற்றுமையிலேயே உள்ளது- சம்பந்தன்

செல்வநாயகம் காலந்தொட்டு செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் கூட தமிழ் மக்களுக்காக என்று மட்டும் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை, தமிழ் பேசும் மக்கள் என்றே நடைபெற்றிருக்கின்றன, தமிழ் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் எங்களுடைய ஒற்றுமை மூலம் தான் அதிகாரப் பகிர்வின் முழுமையைப் பெறமுடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர்...

காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேர் கைது

காங்கேசன்துறை கடற்பகுதியில் தென் பகுதியைச் சேர்ந்த 11 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று படகுகளில் பயணித்து கொண்டிருந்த போதே, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு சிறுபடகுகளும், 40 அடி நிளமான பெரிய படகும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களை மாவட்ட பிரதி நீரியல்வளத்துறை பணிப்பாளர் ரமேஸ் கண்ணாவிடம் கடற்படையினர்...

வடக்கில் காணி அளவீடு செய்வதை நிறுத்த கோரிக்கை

கடற்படைமுகாம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணியினை மேற்கொள்ள கூடாது என கோரி நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.திருநெல்வேலியில் உள்ள நிலஅளவை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் குறித்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டன. இந்த போராட்டத்தின்...

இன்றுமுதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக கூறினார். அத்துடன், புத்தாண்டின் பின்னர் வெளிப்பிரதேசங்களிலிருந்து விஷேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும்...

மீண்டும் வெற்றிலைச் சின்னத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது ஈபிடிபி!

அடுத்து வரப்போகும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஈபிடிபி கட்சி இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. தற்போதைய சிறீலங்காவின் அதிபரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனவின் ஆலோசனைக்கமைய, கட்சியின் பொதுச் செயலர் மகிந்த அமரவீர நட்புக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையிலீடுபட்டுள்ளார். முதற்கட்டமாக, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன்...

யாழில் சித்திரைப் புத்தாண்டில் சிறப்பு பட்டிமன்றம்! இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வருகை!!!

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்டிமன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு...

படையினரின் காணி அபகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதி உள்ளிட்ட சில பகுதிகளில் சுமார் 60 ஏக்கர் காணியும், ஆனைக்கோட்டை பகுதியில் 16 பரப்பு காணியும் படையினரின்...
Loading posts...

All posts loaded

No more posts