சிறுமியை தாயாக்கிய முதியவருக்கு 10வருட சிறை

பாடசாலை மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி அவரை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கிய வயோதிபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குழந்தைக்கும் 20 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் இன்று புதன்கிழமை (30) தீர்ப்பளித்தார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி; முன்னாள் விடுதலைப்புலி போராளி கைது?

சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.குறித்த வீட்டில் இருந்த நபர் தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து இன்று மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த வீட்டினுள் போதைப்...
Ad Widget

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி; தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்களால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவது இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பிற்கும் சில இடங்களில் கண்டுப்பிடிக்கப்படும் பொருட்களுக்கும் நிறைய...

பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களிடம் அபிப்பிராயம்!

வடக்கில் அமைக்கப்படவுள்ள 65,000 வீடுகள் தொடர்பில் மக்களிடம் கருத்தறியும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ். மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுக்கு முன்னால் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பதில் மக்கள் தமக்குரிய அபிப்பிராயங்கள் மற்றும் குறைகள் தொடர்பில் எழுதிப் போடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட பொருத்துவீடுகளை விரும்...

அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கான “மஹாபொல” கட்டுப்பாட்டில் தளர்வு

அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகள் மஹாபொல புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்ள வசதியாக மூன்று இலட்சம் வருமானம் என்ற கட்டுப்பாட்டை ஆறு இலட்சமாக அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு உத்தேசித்துள்ளது. தற்போது அரசாங்க ஊழியர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபாவை வருடாந்த வருமானமாக பெறுவாராயின் அவரது பிள்ளை மஹாபொல புலமைப் பரிசிலைப் பெறும் தகுதியை இழக்கின்றார். இந்த மூன்று...

தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என தனியார் பஸ் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள வரி அதிகரிப்பு,டொலரின் அதிகரிப்பு காரணமாக தமது தொழிற்துறை பெரும் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் முடிவுக்கு வந்தததாக இந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எனவே...

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A32 பாதையில் உள்ள மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைக்குண்டுகளையும் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் கஞ்சா உட்பட்ட பல போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு சோதனை நடவடிக்கைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்றபோதே மேற்படி வெடி...

நந்திக் கடலில் மிதந்த உடல்களுக்கு மத்தியில் மகளுக்காக காத்திருந்தேன்!

இறுதிப்போரின்போது செல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நந்திக்கடலில் மிதந்தபோது, எனது மகள் உயிருடன் வருவாள் என அங்கேயே காத்திருந்தேன் என்று மகளைப் பறிகொடுத்த தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார். வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சிவபாதம் செல்வராணி என்ற தாயார் இவ்வாறு சாட்சியமளித்தார். குறித்த...

மன்னன் சாப்பிட்டதுபோல நான் சாப்பிடவேமாட்டேன்-ஜனாதிபதி

'வாழையிலையில் சுற்றிக்கொண்டுவந்த சாப்பாட்டைத்தான், அன்று நான் சாப்பிட்டேன். அதேபோலத்தான் இன்றும் சாப்பிடுகின்றேன்' என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'மன்னன் சாப்பிட்டது போல நான் சாப்பிடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கலின் பெறுபேறாகவே தான், ஜனாதிபதியானார் எனக் கூறிய ஜனாதிபதி, அதேபோல அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச சேவையாளர்களுக்குத் தேவையான நிவாரணங்களை, வழங்குவதற்குக் குழுவொன்றை நியமிப்பேன்...

வடக்கிலுள்ள காணிகளை’சிங்களவர் வாங்கலாம்-ஆளுநர் ரெஜினோல்ட் குரே

'தமிழர்கள், வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி அங்கு குடியேறி குட்டித் தமிழகம் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள். அதுபோல, வடக்கிலும் சிங்களவர்கள் காணிகள் வாங்கலாம்' என்று, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சர்வோதயம் அமைப்பின் யாழ்ப்பாண அலுவலக ஏற்பாட்டிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு, நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது....

எந்தத் தடைகள் வந்தாலும் சம்பூர் மின் நிலையம் அமைக்கப்படும்!- சியாம்பலப்பிட்டிய!!

சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதில் எந்தத் தடைகள், சவால்கள் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு அமைத்தே தீருவோம்.இப்படி உறுதிபடக் கூறியிருக்கிறார் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய. 'மின்தடை' தொடர்பில் ஒருவருக்கொருவர் சுட்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்காது எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட உறுதி பூணுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

புத்தரின் போதனையை ஞாபகமூட்டிய சம்பந்தன்! – பூரிப்பில் பிரதமர் ரணில்

புத்தரின் போதனைக்கு அமைய நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தனக்கு ஞாபகமூட்டினார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார். புத்தரின் போதனைக்கு அமைய செயற்படாமல் விகாரைகளுக்குச் செல்வதிலும் பலனில்லை என்றும், விகாரைகளுக்கு செல்வதால் மட்டும் பௌத்தர் ஆகிவிட முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில்...

அநுராதபுரம் விமானப் படைத்தள கரும்புலித் தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவருக்கும் பிணை மறுப்பு

அநுராதபுரம் விமானப் படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் என்று கூறப்படும் இருவரையும் பிணையில் விடுவிப்பதற்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மறுப்பு தெரிவித்தது. 16 விமானங்களை அழித்து 400 கோடி ரூபாயை நஷ்டப்படுத்தியது மாத்திரமன்றி பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த...

65 வீட்டுத் திட்டத்தை மீள் பரிசீலனை செய்யக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வடக்கு, கிழக்கில் 65ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வீட்டுத்திட்டத்தை நிறுத்தி, அந்த வீடுகள் வடக்குக்கு பொருத்தமானவையா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை நேற்று (29) அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி வீட்டுத்திட்ட...

வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலமாக மீட்பு

24 வயது இளைஞர் ஒருவர் இரத்தக் கறையுடனும், அடிகாயங்களுடனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியைச் சேர்ந்த சின்னராசா மகிந்தன் (வயது 24 ) என்ற இளைஞரே சடலமாக நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். யாழ். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பின் வீதிப் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும்...

டக்ளஸ் மீதான கொலை வழக்கு – ஆட்டோ உரிமையாளர் சாட்சியம்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் சூளைமேட்டைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம்...

நல்லூரில் வெடிமருந்து பரல்கள் கண்டுபிடிப்பு

நல்லூர், கல்வியங்காடு, யமுனா வீதியிலுள்ள காணியொன்றில் புதையுண்ட நிலையில் வெடிமருந்து எனச் சந்தேகிக்கப்படும் பரல் ஒன்று திங்கட்கிழமை (28) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், சில பரல்கள் அங்கு புதையுண்டு இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், அந்த இடத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன், பரல்களை மீட்டு அதனை பரிசோதிப்பதற்கான பொறுப்பை விசேட அதிரடிப் படையினர்...

மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த முனைகின்றார்கள்

'நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மறைக்கும் வகையில் நாகதீப விகாரைக்கு முன்பாக புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு, மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் முனைகின்றனர்' என நாகதீப விகாராதிபதி நவதகல பதுமகித்தி தேரர் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும்...

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 'மின்சாரப் பரிசு' வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 'கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்' என்று கூறினார். இந்தப் போட்டியில்...

மழை பெய்யலாம் – உஷ்ணம் குறையுமா?

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலவும் உஷ்ணமான காலநிலையில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என, வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் லலித் சந்திரபால குறிப்பிட்டுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts