யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவுள்ள 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத்திட்டத்தை மாற்றி கல்வீடுகளை வழங்குமாறு கோரியும், திருகோணமலை சம்பூர் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் அமையவுள்ள அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கோரியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்சிச லெலினின்ச கட்சி, நவசமாஜ கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஆசிரியர் சங்கம், சுன்னாகம் சனசமூக நிலையத்தாரின் ஒத்துழைப்புடன் பலரும் பங்குபற்றியதுடன் பலரும் பல ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பினர்.மேலும், பல கோஷங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.