- Tuesday
- March 3rd, 2026
இலங்கையர்கள் 46 பேர் பணப் பதுக்கல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ளமை குறித்து பனாமா பேப்பர்ஸ் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் இலங்கையின் பெரும் வர்த்தகர்களான போரா சமூக முஸ்லிம்கள் 13 பேர் மற்றும் ஐந்து தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். சிங்களவர்கள் 25 பேரில் லக்பிம பத்திரிகை மற்றும் சுமதி குரூப் நிறுவனங்களின் தலைவரும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான...
ஈபிடிபி உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்ற ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியமை சட்டரீதியானதா என்பது குறித்து ஆலோசனை பெற்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பணித்துள்ளார். அரசாங்கத்தின் அனுமதிப் பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார் என்பதற்காக ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்...
யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனுக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். யுத்தத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் தொடர்பான...
சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிப்பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி,...
யாழ் மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின்மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதுடன், மூவாயிரம்...
2017ம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என,...
வட, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு சமஷ்டி முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்துள்ளது. வடமாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பாிந்துரைத்த திட்ட வரைபை...
தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் 33 மருத்துவ பரிசோதகைளுக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டுப்பாட்டுச் சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நோயாளர்...
தொடர் எதிர்ப்புகள் காரணமாக, இலங்கையில் நடைபெறவிருந்த தன்னுடைய இசை நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரகுமான் ரத்து செய்திருக்கிறார். நெஞ்சே எழு என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர்.ரகுமான் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வருகின்ற 23ம் தேதி இலங்கையில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இலங்கையில் முதன்முறையாக ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் என இதற்காக விளம்பரங்களும் செய்யப்பட்டன....
யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மாணவர்கள் சிலர், அங்கு அரசியல் கட்சி சம்பந்தமான பரப்புரை நடவடிக்கையை மேற்கொண்டதோடு, அவர்களை தடுக்க முயன்ற விடுதி காவலரை அச்சுறுத்தியும் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்கு காரில் வந்த யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் மூவர்,...
தற்பொழுது வடக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றபோதிலும் வற்றாப்பளை அம்மன் கோவிலின் நுழைவு வாசலில் இருக்கும் கிணற்றில் நிலமட்டத்திற்கு மேல் இரண்டு அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குழாயால் நீர் வெளியேறிய வண்ணமே உள்ளது. இது பற்றி வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவிலின் நிர்வாகசபைத் தலைவர் ம.விக்கி தெரிவிக்கையில் இக்கிணற்றுக்கு அண்மையில் எந்தவொரு நீர்நிலைகளும்...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவிருந்த அறுபத்தையாயிரம் வீடுகள் அமைப்பது, எந்த நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக்கூட்டத்திலேயே இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான இறுதி முடிவினை வழங்குவது தொடர்பில், சிறீலங்கா அரச...
அண்மைக்காலமாக நாட்டில் காணப்படும் தொடர் வரட்சியால் மலையகத்தில் நீர்தேக்கங்கள் வற்றி வருகின்றன. இந்த நிலையில் மலையகத்தில் உள்ள மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்கமும் தற்போது முற்றாக வற்றியுள்ளது. இந்த நீர்தேக்கம் அமைக்கும் போது நீருக்குள் சங்கமமான பழைய மஸ்கெலியா நகரத்தின் பாகங்கள், வரலாற்றுமிக்க கோயில், விகாரை, பாலங்கள், முஸ்லிம்பள்ளி வாசல், பிள்ளையார் கோவில், கிருஸ்தவ தேவாலயம் உட்பட...
வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாளும் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று #யாழ்.#திருநெல்வேலியியுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும் அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து...
வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் ஒட்டகப்புலம், வறுத்தலைவிளான் பிரதேசங்களை முழுமையாகவும் காங்கேசன்துறையில் சில பகுதிகளையும் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்க இராணுவம் சம்மதம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளை விடுவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. மேலும் கடந்த வாரம்...
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட வெடிபொருட்களில் உள்ளடங்கியிருந்த சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்து, மிகவும் பழைமையானது என்றும், அது வெடிக்கும் திறனை இழந்து விட்டதாகவும், காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர, சாவகச்சேரி- மறவன்புலவில் உள்ளிட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், மூன்று பொதிகளில் 10 கிலோ சி-4 பிளாஸ்டிக் வெடிமருந்தும் காணப்பட்டது....
வடமாகாண சபை அமைச்சர்களை நீக்கி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று வியாழக்கிழமை கையளிக்கவுள்ளது. இந்த விண்ணப்பத்தில் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் 16 உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளதோடு, மேலும் சிலர் இன்று கையெழுத்திடவிருப்பதாக வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஐ.பி.சி தமிழ்...
புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் சீருடைத் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் நிலையம் (கூரியர்) ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து ரின் மீன், ஆடைகள் மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதறைக்கு வந்திருந்த அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும்...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின்...
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம். தனியார் பஸ்ஸை முந்திச் செல்லாவிட்டால் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தண்டப்பணத்தை யாழ்.சாலை முகாமையாளர் அறவிடுகின்றார் என ஸ்ரீங்கா சுதந்திர போக்குவரத்துச் ஊழியர் சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம்...
Loading posts...
All posts loaded
No more posts
