தலைவர் பிரபாகரன் மரணித்ததை அடுத்து புலிகள் இயக்கத்திற்கு உயிர்கொடுக்க எவரும் இல்லை: சி.வி.கே

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும், மீண்டும் தலைதூக்காது. தமிழ் மக்கள், ஒருபோதும் மீண்டுமொரு யுத்தத்துக்குள் தள்ளப்பட மாட்டார்கள். தெற்கைச் சேர்ந்த சில அரசியல் சக்திகளுக்கே, யுத்தமொன்றின் தேவை அவசியமாகியுள்ளது' என்று வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடந்த...

பொருத்து வீட்டுத் திட்டம்: உடன் இடைநிறுத்த ஜனாதிபதி பணிப்பு!

பொருத்து வீட்டுத் திட்டப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும், மீளாய்வின் பின்னர் அது தொடர்பில் முடிவெடுக்கலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெற்றது. இதன்போது பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில்...
Ad Widget

முஸ்லிம் இளைஞர்கள் காட்டுத்தனம்!! சிறுமியையும் யுவதியையும் கடத்திச் சென்று வன்புணர்வு!

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியையும் 19 வயது யுவதியையும் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என இரு முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் வக்கிர சம்பவம் மட்டக்களப்பு கிரான் தெற்கு வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமியையும் யுவதியையும் கடத்திச சென்ற முஸ்லிம் இளைஞர்கள் இருவரையும் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் மறுநாள்...

இந்திய மீனவர்கள் 32 பேர் விடுதலை

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இந்திய மீனவர்களை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் அடிப்படையில் மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை நீதிமன்றங்கள், செவ்வாய்க்கிழமை (05) விடுதலை செய்ததாக, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம்...

தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பக் கற்றைநெறியைக் கற்று வெளியேறிய மாணவர்கள், தங்களுக்கு அரசாங்க வேலையைப் பெற்றுத்தருமாறு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். வடமாகாண தொழில்நுட்பச் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. தங்கள் சங்கத்தில் மொத்தம் 350பேர் இருப்பதாகவும் தங்களுக்கு நிபந்தனைகள் இல்லாமல் நேரடியாக உள்வாங்கும் படியும்...

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

சமுர்த்தி முகாமையாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள்

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்ட சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் நெடுந்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், யாழ்.மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ளது. ஏழாலையிலுள்ள சமுர்த்தி முகாமையாளருக்கு எதிராகப் பெண் ஊழியர்களினால், யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஆகியோரிடம் முறைப்பாடு...

‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி!! ராஜபக்ஷவினருக்கு தொடர்புள்ளதா?

விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ஊடகவியலாளர்கள் பலர் இணைந்தே இந்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளனர். வொஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கமே (International...

நிரந்தர இராணுவ முகாமை கூழாவடியில் நிறுவ முயற்சி!

ஆனைக்கோட்டை கூழாவடியில் தனியாருக்குச் சொந்தமான 16 பரப்புக் காணியை இராணுவ முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அந்தக் காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை வருகை தரவுள்ளதாகக் காணி உரிமையாளருக்கு அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கு மாகாண முதலமைச்சர்...

எனக்கு திருமணமாகவில்லை. நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன்..நீதிபதியிடம் கெஞ்சிய கைதி!!!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் மைத்துனனைக் குத்திக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ள மேல் நீதிமன்றம், எதிரியின் சார்பில் முன்வைக்கப்பட்ட கருணை மனுவின் அடிப்படையில் அதனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றும்படி ஜனாதிபதிக்குப் பரிந்துரைத்திருக்கின்றது. இந்தக் கொலைச் சம்பவம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடைபெற்றுள்ளது....

வடமாகாணசபை அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் கடிதம்!

வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி...

4 ஏக்கர் சவுக்கு காடுகள் தீயில் எரிந்து நாசம்

வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார். சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல்...

இலஞ்சம் பெற்ற பொலிஸாரை கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவு

யாழ். நீதிவான் நீதிமன்றில் வைத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் 500 ரூபாயை இலஞ்சமாக பெற்ற சந்தேகத்தில் கைதான பொலிஸ் உத்தியோகத்தரை இன்று புதன்கிழமை (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முற்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் தண்டப்பணம் செலுத்திவிட்டு...

23 சதவீதமான மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 23 சதவீதமான மாணவர்கள், காலை உணவை உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர்' என்று யாழ்ப்பாணம் பாடசாலை மருத்துவ அதிகாரி மருத்துவர் வைத்திலிங்கம் யோகேஸ்வரன் தெரிவித்தார். 'வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள் - 3' நூல் வெளியீட்டு நிகழ்வில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது....

நாடு திரும்பும் முஸ்லிம்கள் மீது கண்காணிப்பு

'இஸ்லாமிய அடிப்படை' வாதம் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டுக் கல்வி பயின்று, தொழில் புரிந்து அல்லது வேறு பணிகளுக்காகச் சென்று திரும்பி வருகின்ற முஸ்லிம் இனத்தவர்கள் மற்றும் இந்நாட்டிலுள்ள இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்கள் ஆகியோரின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் செயற்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன' என்று சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல...

பஸ் கட்டணத்தை கூட்டி அறவிட முடிவு

தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இந்த...

 ரணில்-மஹிந்த சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப்...

வடக்கில் மஹிந்தவால் அபகரிக்கப்பட்ட காணிகளில் 3.6 சதவீத நிலப்பரப்பே மைத்திரியால் விடுவிப்பு!

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட 69 ஆயிரத்து 992 ஏக்கர் நிலப் பரப்பில், மைத்திரி அரசு 2 ஆயிரத்து 565.5 ஏக்கரை மாத்திரமே விடுவித்துள்ளது. இது அபகரிக்கப்பட்ட நிலப் பரப்பின் 3.6 சதவீதமாகும் என்று பிரிட்டன் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. "இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம்...

மஹிந்தவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகள் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பிரிவிலுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருக்கும் இராணுவத்தினரில் 50 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக கடமையிலிருந்து நீங்கும்படி இராணுவத் தலைமையகம்...

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்ப நிகழ்வு!

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை நேற்று முன்தினம் பி.ப 3.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத் தோட்டப்பயிர்கள் மாவட்ட...
Loading posts...

All posts loaded

No more posts