Ad Widget

புத்தாண்டன்று ‪யாழ் மக்களை சுட்டெரிக்க போகின்கிறது வெய்யில்‬!!

‎வெப்பத்தின் கொடுமை இப்பொழுதே அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாளும் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று ‪#‎யாழ்‬.‪#‎திருநெல்வேலியியுள்ள‬ வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன்‬ தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குள் சிறு மழை பெய்ய வாய்ப்புள்ள போதும் அதனைப் பெரியளவில் எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் —

வடக்கில் நேற்றுவரை வடக்கு-கிழக்கு பருவபெயர்ச்சிக்காற்று நிலவிய நிலையில் நேற்று பிற்பகலிலிருந்து இடைக்காலப் பருவப்பெயர்ச்சிக் காற்று நிலவுகிறது இதனால் பிற்பகலில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அல்லது மழையின்றி இடி மின்னல் உருவாக வாய்ப்புள்ளது. அத்தகைய மழை சிறயளவிலேயே இருக்கும்.

தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள வெப்பநிலையை விட பிற மாகணத்தில் வெப்ப நிலை அதிகரித்த நிலையிலில் உள்ளது இந்த வெப்ப நிலை அதிகரிப்பு பிரதேசம் தோறும் மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெப்பம் தற்போதுள்ளதை விட மேலும் அதிகரித்து வெப்பம் காரணமாக பிற்பகலில் மழை முகில் கூட்டம் உருவாகிறது. அது சில வேளைகளில் மழையாகப் பெய்ய வாய்ப்புள்ளது. ஆனாலும் பெரியளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

தற்போது யாழ்ப்பாணத்தில் 36.3 பாகை செல்சியல் வெப்பநிலை நிலவுகிறது . இடிமுழக்கம் மற்றும் மின்னலின்போது அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts