Ad Widget

புனர்வாழ்வு பெறும் போராளிகளின் புத்தாண்டு நிகழ்வு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

rehab-ltte-newyear-

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின் வவுனியா பணிப்பாளர் உட்பட புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Posts