Ad Widget

யாழ் முயற்சியாளர் 2016 கண்காட்சி நிகழ்வு

உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி ஒன்றின் ஆரம்ப நிகழ்வு இன்று (10) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.

யாழ் மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு அறிமுகம் செய்யும் நோக்கிலும் அதற்கான சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் நடாத்தப்படும் இக்கண்காட்சியானது இன்றும் (10) நாளையும் (11) மு.ப 10.00 மணியிலிருந்து பி.ப 6.00 மணிவரை யாழ்ப்பாணம் மாநகரசபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்விற்கான பிரதம விருந்தினராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் தலைமை காரியாலய பணிப்பாளர் சுதீர ஜயரத்ன மற்றும் யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இரஞ்சிதமலர் மோகனேஸ்வரன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக சனச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் சு.சபேஸ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts