- Saturday
- June 7th, 2025

ஆசிரியர் ஒருவர், பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவர்களின் தலைமுடிகளை வெட்டி, அவர்களது சட்டைப்பைக்குள் திணித்தச் சம்பவமொன்று, பதுளை மகா வித்தியாலயத்தில், புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தம்மை பெரிதும் பாதித்துவிட்டதாகவும் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுககு சரியான பதிலளிக்கமுடியாது போனதாகவும் மேற்படி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பதுளை வித்தியாலயத்தில், தரம் 9 இல் கல்விப் பயின்று...

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டுள்ளது. குறித்த முறுகல் நிலை வவுனியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, வாகனம் ஒன்றில் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன்...

யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது, மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5...

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்குமாறு பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் இன்று முன்வைத்துள்ளார். அத்துடன், தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்பாகவுள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பி னர்களுக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவாவது கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளத்தில் அவர்களது...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளை விமர்சனத்திற்கு உட்படுத்தும் வகையில் சிங்கள மொழியில் பாடலொன்று வெளியாகியுள்ளது. குறித்த பாடலில் சமஷ்டியை கோரும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் முட்டாள் மற்றும் பைத்தியம் என அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், புலி உருவ பொம்மை ஒன்றை காட்சிப்படுத்தி, அதனை தனது செல்ல பிராணியாக வடக்கு முதல்வர் வளர்ப்பதைப் போன்றும்...

உண்மையில் இந்த ஆவா குழு என்பது யார்? இதில் எத்தனை பேர் உள்ளனர்? இவர்கள் எங்கு ஒன்று கூடுவார்கள்? இவர்களின் தலைவன் யார்? இவர்களின் பின்புலம் என்ன? இவ்வாறான பல கேள்விகள் எமது மனதில் உள்ளன. இவை அனைத்திற்கும் இந்த ஆவா குழு என்று பெயர் யாரால் சூட்டப்பட்டது? எதனால் சூட்டப்பட்டது என்று பார்த்தாலே இவை...

திருகோணமலை, கன்னியா உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நான்காவது ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் வைத்து, தன்னுடைய மனைவியான ராஜலக்ஷ்மனன் நித்தியா (வயது 32), மகள்களான காயத்திரி (வயது 10), சந்தியா (வயது 08) ஆகியோரே வெட்டிப் படுகொலை செய்துள்ள சந்தேகநபர், பொலிஸாரிடம் பரபரப்பான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். நிர்வாணக்கோலத்தில் மயக்கமடைந்திருந்த நிலையில், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அக்குடும்பத்தின்...

கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்கும் 24 மாணவா்களின் காலணிகள் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் கடந்த 03-11-2016 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்பு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை கல்விக் கேட்டத்திற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11...

யாழ்.நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட பெண்களைக் குறித்த நிறுவனப் பணியாளர்கள் முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை தடுத்து வைத்திருந்த சம்பவம் பொன்னாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இவற்றை விட ஒரு படிமேல் சென்று கடனைச் செலுத்த முடியாவிட்டால் தற்கொலை செய்யுங்கள் அப்படிச் செய்தால் கடனில்...

இந்து ஆலயங்களில் குறிப்பாக முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விரத முடிவு நாளில் சிறப்பாக சூரன் போர் நிகழ்வு நடைபெறுவது வழமை. இலங்கையின் சில ஆலயங்களில் நவீன மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது. இது சென்ற வருடமும் இலங்கையின் தென்பகுதியில் இடம் பெற்றிருந்தது தற்போது வடபகுதிக்கும் பரவியுள்ளது. தேவர்களை துன்புறுத்திய சூரனையும் அவன் சகோதரனையும்...

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்துள்ளது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டுள்ளது. இது...

தனக்கு போதை தலைக்கேறியதால், கணவனொருவன் தன்னுடைய மனைவியை, மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய மிகவும் அறுவறுக்கக் கூடிய சம்பவமொன்று வடக்கில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட, முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த அப்பெண், யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் உயிருக்கு எவ்விதமான ஆபத்துகளும் இல்லையென தெரிவித்த, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், அப்பெண்ணுக்கு மேலதிக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்...

ஹெரோய்ன் கொள்வனவு செய்வதற்காக, தனது சிறுநீரகத்தை 500,000 ரூபாய்க்கு விற்பனை செய்த போதைக்கு அடிமையான நபரொருவரை, 100 மில்லிகிராம் ஹெரோய்னுடன், காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். காலி, தன்கெதர பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், தனது சிறுநீரகத்தை விற்பனைச் செய்த பின்னர், கொழும்புக்குச் சென்றுள்ளதாகவும்...

நவம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கிலாரி கிளின்ரன் வெற்றி பெற வேண்டி சமயப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளப்போவதாக வட மாகாணசபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாளை (2) நல்லூர் ஆலய முன்றலில் 1008 தேங்காய்கள் உடைத்தும் பெரியன்னை தேவாலயத்தினில் மெழுகுதிரி ஏற்றியும் பிரார்த்தனை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார். யாழ்.ஊடக அமையத்தில்...

யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ”ஆவா கெங்ஸ்டர்” உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனும், ஆசிரியரும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் ஆவா குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரில் இரு வாள்களுடன் கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நவம்பர் 2 ஆம் திகதி...

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் கடந்த 21ஆம் திகதி அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்காக தமிழ்நாடு, சங்கரன்கோவில் நிப்பொன்சான் மியகோஜி ஆசிரம பௌத்த குருமார்கள், வெள்ளிக்கிழமை (28) ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமாதானத்தை வலியுறுத்தி யாத்திரை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர்கள், இன்று யாழ்;ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போதே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் தாயொருவரை கோழிக் கூண்டில் அடைத்து சங்கிலியால் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம் வயோதிப தாயொருவர் கோழிக் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த தாய் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று...

கிளிநொச்சி 55ஆம் கட்டைக்கு ஏ9 பாதையில் இன்று மாலை ஒரு சிலர் குடித்துவிட்டு போதையில் வீதியால் போகிற வாகனங்களை மறித்து தவறான வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடிய வண்ணம் இருந்துள்ளனர். ரிப்பர் வாகனம் ஒன்று வந்தபோது அதை மறித்து அதன் கண்ணாடியை உடைத்துள்ளார்கள். கர்த்தாலை ஒட்டி உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பொலிசார் உடனே சம்பவ இடத்துக்கு...

ஹபராதுவ, லியனகொட, லுனுமோதல வீதியை இரண்டு அமைச்சர்கள் திறந்து வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த வீதியின் ஒரு பகுதியை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும், மற்றைய பகுதியை நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவும் திறந்து வைத்துள்ளனர். ஹபராதுவ ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் சந்திரலால் அபேகுணவர்த்தனவினால் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்...

All posts loaded
No more posts