Ad Widget

ஒரே இனம், ஒரே நாடு, ஒரே கொடியின்கீழ் பணியாற்றுவேன், புதிதாகப் பணியேற்பவர்களிடம் கையொப்பம்!

இலங்கையில் ஆட்சிசெய்யும் நல்லாட்சி எனப்படும் சிங்கள அரசினால் புதிதாக அரச கடமைகளைப் பொறுப்பேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றுநிருபம் தமிழ் மொழியில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அதில் அனைவரையும் கையெழுத்திட்டு அவர்களது பணியை ஆரம்பிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்தது.

குறித்த அந்த ஆவணத்தில் இன்று ஆரம்பிக்கும் புத்தாண்டில், ஒரே நாட்டின், ஒரே இனத்தின், ஒரே கொடியின்…. என ஆரம்பிக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த இனவாதச் செயற்பாடு புதிதாகக் கடமையேற்ற பல உத்தியோகத்தர்களை முகம் சுழிக்கவைத்துள்ளது.

பின்னர் அதில் நாட்டில் ஒரே இனமாக என எழுதப்பட்ட வாசகம் பேனாவால் வெட்டப்பட்டு ஒரே இனம் என்பதற்கு பதிலாக ஒரே தேச மக்கள் என்றும் மாற்றப்பட்டும் இருந்தது.

Related Posts