கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....

யாழில் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில்...
Ad Widget

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பயன்பாடின்றி உள்ள காணிகளை அபகரிக்கும் கும்பல்!!

யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல்- பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும்...

கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே குறித்த இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார...

இலங்கையில் 17 ஆவது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 42 வயதுடைய ஜா எல பகுதியை சேர்ந்த ஒருவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை...

குருநகர், பாசையூர் பகுதி தனிமைப்படுத்தலில்!!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட குருநகர், பாசையூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு பாதிப்பு ஏற்படாது பேண இன்றைய தினம் முன்னேற்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் கலந்துரையாடப்பட்டது. அந்தப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி...

கொரோனா வைரஸ்: நோயாளியின் குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுவர்

கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (27) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படமாட்டார்கள்...

அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் – GMOA எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக உரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் அபாயத்தில் உள்ள மாவட்டங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டினார்....

யாழில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையைச் சேர்ந்தவர் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்றையதினம்...

இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்கு காரணம்!!! – வெளிவந்த முக்கிய தகவல்

உக்ரைனிலிருந்து வந்த விமான பணியாளர்கள் குழுவைச் சேர்ந்த ஒருவரே இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலைக்கு காரணம் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அறிக்கையில் புலனாய்வு அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துருக்கியிலிருந்து வந்த விமானத்தில் இலங்கை வந்த உக்ரைன் பிரஜைகள் சீதுவையில் உள்ள...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை மீன் சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்து...

கோரோனா நோயாளி தப்பி ஓட்டம்; கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவிக் கோரிக்கை

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். 26 வயதுடைய அந்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் உள்ள கோவிட் -19 சிகிச்சை...

நாட்டை முடக்குவது குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் இராணுவத்தளபதி!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தல் போன்ற எந்த தீர்மானங்களும்...

நாட்டில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது!

நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆறு பேர் பேலியகொட மீன் சந்தைத் தொழிலாளர்கள் எனவும் ஏனைய 22 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்...

கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு!!

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பரிவுகளுக்கு உடடினாய அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று!!

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மினுவாங்கொட கொத்தணியிலிருந்து கொரோனா சந்தேகத்தின் பெயரில் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லுாரியில் ஒரு தொகுதி மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொகுதியினருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

முல்லையில் கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை!! மீனவர்கள் குற்றச்சாட்டு

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது குறித்து எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்....

மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 21 பேர் அனுமதி!!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடயைச் சேர்ந்தவர்கள் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று கண்டறியப்பட்டது. அவர்கள் 21 பேரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டனர்....

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சேவையில் ஈடுபட்டுவரும் சாரதி!

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களத்தினால் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்ட...
Loading posts...

All posts loaded

No more posts