பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு உயரதிகாரி ஒருவரே காரணம் – விஜயகலா

தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொதுமன்னிப்பு நிராகரிக்கப்பட்டமைக்கு சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரி ஒருவரே காரணம் என்று மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் மனதாயிருக்கின்ற போதிலும், அவ்வாறு விடுதலை செய்தால் தென்னிலங்கையில் கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தை குறித்த உயரதிகாரி முன்வைத்து...

பிரதமரின் பிணை யோசனைக்கு த.தே.கூ எதிர்ப்பு

தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்ததால் தான் அக்கைதிகள், தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தினார்கள், விடுதலைக்கு மாறாக, பிணையில் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று தெரிவித்துள்ள...
Ad Widget

அரசின் தீர்மானம் எமக்கு ஏமாற்றம்! மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ளோம்!! – தமிழ் அரசியல் கைதிகள் அறிவிப்பு

தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர். தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில்...

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணை அறிக்கை பெப்ரவரியில்!

இசைப்பிரியா, பாலச்சந்திரன் படுகொலைகள் உட்பட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐந்து பேரடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று விசாரைணகளை நடத்தி வருகின்றது என்றும், இந்த விசாரணைகளை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் கண்காணித்து வருகின்றார் என்றும் காணாமல்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலும் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்....

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க அரசாங்கம் முடிவு

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், நீதி ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் தலைமையில்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்ற நிலையில் பிரதமர் தலைமையி லான இன்றைய மாநாடு தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ளும் களமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது....

கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டர்

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர் திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார். அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளைக் கொடி விவகாரம், பாலச்சந்திரன் கொலை உயர்மட்டக் கட்டளையாலேயே நடந்தன!

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்...

ஐ.நா. தீர்மானத்தின் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!

"ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...

இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது மஹிந்த அரசு! – பிரதமர் ரணில்

இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார். 2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில்...

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் ; தமிழ்செல்வனின் மனைவி சாட்சியம்

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என...

மற்றுமோர் முன்னாள் போராளி திடீர் மரணம்!! அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த...

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்

இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள்...

சனல்-4 வீடியோக்களில் உண்மைத் தன்மை உண்டு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரிட்டனைச் சேர்ந்த "சனல்-4' தொலைக்காட்சி வெளியிட்ட, "நோபயர் சூன்' (போர் தவிர்ப்பு வலயம்) ஆவணப்படத்தில் காணப்படும் காட்சிகளில் உண்மைத்தன்மை இருக்கலாம் என்று மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. போரின்போது காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால...

மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் : பிள்ளையானின் அதிர்ச்சித் தகவல்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம்...

இறுதிப்போரில் இழப்புக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாம் – ரணில்

போரின் இறுதி மாதத்தில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கலாம் என சில மதிப்பீடுகள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இறந்தவர்கள் தொடர்பான உறுதியான கணிப்பீடுகள் கிடைத்திருக்கவில்லை எனவும் நினைத்ததிலும் பார்க்க குறைவான மரணங்களே இடம்பெற்றிருக்கக்கூடுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ' ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதே...

உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு...

ஆறு வருடங்களாக காணாமல் போயிருந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் குடும்பம் திரும்ப வந்தனர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் கடந்த ஆறு வருடங்களாக காணாமல் போனார்கள் என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் வரணியில் வைத்து இறக்கி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 33 அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசம்!

தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவ அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும்...

மனித மண்டையோட்டுடன் பெண்களின் ஆடையணிகள்

அரியாலை முள்ளியில் மனித மண்டையோடு, எலும்புகள் மற்றும் 2 பெண்களின் ஆடைகள், அவர்களது பொருள்கள் என்பன இருந்தமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சூழமைவுகளைப் பார்க்கும் போது அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மண்டை ஓடு உள்ளிட்ட அந்தப் பொருள்கள் மணல் அகழும்போதே வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலைக்கும் செம்மணிக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts