- Saturday
- May 4th, 2024
யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை மக்களின் காணிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில், அந்நிகழ்வு திடீரென மறு அறிவித்தல் வரும்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளினால் உரிய மக்களிடம் கையளிக்கப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் ஆரோக்கியமான முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிட்சர்லாந்து தலைநகர் டாவோஸ் நகரில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உள்ளூர்,...
தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை...
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது 'உள்ளக விசாரணையாக' இருக்கும் என்றும் பி.பி.சிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில்...
ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள்,...
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முரணாக நடந்துகொள்ளப் பார்க்கிறேன் என எனக்கு எதிராக குற்ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. தமிழ் மக்கள் பேரவை ஒரு போதும் அரசியல் கட்சியாக மாறாது - எந்த அரசியல் கட்சிக்கு எதிராகவும் செயற்படாது - இதன் ஒரே இலக்குத் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகக் குரல் கொடுப்பதும் அவற்றுக்காகப்...
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (19) பிற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி, அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நத்தார் விழாவில் கலந்துகொண்டபோது இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம் ஒன்றுக்குச் சென்று அவர்கள் பற்றி விசாரித்ததுடன், அவர்களை மீள்க்குடியமர்த்துவதற்கான காணிகளை காண்பிக்கும் நடவடிக்கைகள் ஆறு மாத...
அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பி கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை மக்கள் இயக்கம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைதிகள் விடயத்தில் சரியான தீர்மானத்தினை முழுமையாக எடுப்பீர்கள் என்ற நம்பிகையில்...
பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது: பூநகரி- கெளதாரிமுனை - பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை...
தமிழ் மக்கள் பேரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு கேட்டுக்...
அண்மையில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத நிலமையில் காணப்படுகின்றார்கள். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இடம்பெயாந்து தமது வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்து பல்வேறு துன்ப துயரங்களுக்கும் உள்ளாகிய...
மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கொலை சம்பவத்தினை புரிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே...
போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கண்டித்துள்ளது. பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசியிடம் கூறினார்....
யாழ்ப்பாணத்தில் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீனவர்களின் பயன்பாட்டுக்கு விடுவிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பலாலி படைத்தலைமையகத்தில் நேற்றுமுன்தினம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டப் பாதுகாப்பு மாநாட்டில், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை படையினர் விடுவிக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை...
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய சர்வ மதத் தலைவர்கள், முன்னுதாரணம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் அரச பிரமுகர்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா மனித...
தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில், சர்வமதங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே. 1960 களில் சர்வமத சம்மேளனத்தின் உப செயலாளராக நான் இருந்தேன். பிரதமர் டட்லி சேனாநாயக பிரதமராக இருந்த காலத்தில் எங்கள் சம்மேளனம் இதையே செய்தது....
பலாலி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே ஜனாதிபதி இதில் கலந்துகொள்ளவில்லையெனவும் அதனையிட்டு அவர் கவலை தெரிவித்ததாகவும் தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேசிய பொங்கல் விழாவையொட்டி, பாதுகாப்புக்கள் பலப்படுத்தபட்டு யாழ்ப்பாணத்தின் வீதிகளில்...
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக...
ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள்...
கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வனஇலாக அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம், மன்னகுளம் காட்டுப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 3 மணியளவில் போரின் போது தமது கணவன்மாரை பறிகொடுத்த நான்கு விதவைப் பெண்கள் தமது...
Loading posts...
All posts loaded
No more posts