முன்கூட்டியே வெளியாகிறது ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை!

ஜெனிவாவில் தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக வரும் 28ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இதன் போது, கடந்த ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்....

யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் வீசவில்லை!– கோத்தபாய ராஜபக்ஷ!

தான் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த வேளையில் சிறீலங்காப் படையினரால் கொத்துக்குண்டுகள் வீசப்படவில்லையென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தி கார்டியன் நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பிய வேளை அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனது காலத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். வெளியிடப்பட்ட ஒளிப்படங்களை...
Ad Widget

மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி வலி.வடக்கு மக்கள் இன்று பேரணி!

மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர். மயிலிட்டி மீள்குடியேற்ற குழு, மயிலிட்டி மீன்பிடி கூட்டுறவு சங்கமும், நிலன்புரி நிலையத்தின் அமைப்புக்களும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்தார். இதேவேளை மயிலிட்டியை சேர்ந்த...

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையம், 27 வருடங்களின் பின் சொந்த இடத்தில்

காங்கேசன்துறை பேரூந்து தரிப்பு நிலையமானது 27 வருடங்களிற்கு பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை சொந்த இடத்திற்கு சென்றுள்ளது. இன்று வரை காங்கேசன்துறைக்கான பேரூந்து சேவையானது படிப்படியாக மீள கையளிக்கப்பட்ட பகுதியான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையிலுள்ள பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தக்...

தெல்லிப்பளை பிரதேசத்தில் 5, 100 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கையிருப்பில்

தெல்லிப்பளை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 5 ஆயிரத்து 100 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களது 201.3 ஏக்கர் காணிகள் நேற்று சனிக்கிழமை மீளக்கையளிக்கப்பட்டன. இந்தநிலையில் தெல்லிப்பளை பிரதேசசெயலர் பரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5100 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வல்லை, தெல்லிப்பளை, அராலி வீதியை அண்மித்த...

 விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேற அனுமதி

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்து நேற்று சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியமர இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காணிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியால் யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம்...

அரசுடன் நேரில் பேசுவதற்கு குழு அமைத்தது கூட்டமைப்பு!

அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசுடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுக் குழுவொன்றை நியமித்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா...

மதுவுக்காக அதிகம் செலவிடும் மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதலிடம்- ஜனாதிபதி

நுவரெலியா மாவட்டம் மது பாவனையில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி ஜனாதிபதி வழங்கிய ஆலோசனையின் பேரில், மதுவுக்கு முற்றுப்புள்ளி என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் இன்று (26) காலை 10.00 மணிக்கு நுவரெலியா...

பொருளாதார மையம் தொடர்பில் வடக்கில் பொதுகருத்து ஏற்பட வேண்டும்

“வடமாகாணத்துக்கான பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதில் வடமாகாண முதல்வர், வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் மத்தியில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். அதை வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிந்துக்கொள்ள அரசாங்கம் காத்து கொண்டு இருக்கிறது” என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்...

வலி வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு

வலி வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களின் 201.3 ஏக்கர் காணிகள், இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இன்று, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியினால், விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற...

பிரபாகரன் சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த அடையாளம் தெரியாமல் போயிருப்பார்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று சரியாக சிந்தித்திருந்தால் மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவராகவே இருந்திருப்பார். பிரபாகரனின் மௌனம் மஹிந்தவுக்கு சாதகமாக அமைந்து விட்டது என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். இனவாதத்தால் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என மஹிந்த உள்ளிட்ட...

தனியொரு மாணவன், மாணவிக்கு பாடசாலையில் விசேட வகுப்பு நடத்த தடை!

தனியொரு மாணவனுக்கோ மாணவிக்கோ மாலை நேர மற்றும் விடுமுறை நாள் விசேட வகுப்புக்களை பாடசாலை வளாகத்தினுள் எக்காரணம் கொண்டும் நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்பட்டால் குறிப்பிட்ட ஆசிரியர், அதிபர் ஆகியோர் குற்றங்களைப் புரிந்தவர்களாகக் கருதப்பட்டு சட்ட ஒழுங்கின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி புலோலி புற்றளை மகா...

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்கள் சூறையாடப்படுகின்றன- வடக்கு முதல்வர்

தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்களை சூறையாட சிலர் முயற்சிப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன்போது வடமாகாணத்துக்கு கிடைக்கப்பெறவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு...

வலி.வடக்கில் 201 ஏக்கர் நிலப்பரப்பு நாளை விடுவிப்பு

வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக் காணி விடுவிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பதுடன் உரியவர்களிடம் காணி பத்திரங்களையும் வழங்கவுள்ளார்....

தென்னிந்திய படங்களை பார்த்தே யாழில் குண்டர் குழுக்கள் உருவாகின: பகீர் தகவல்!

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களே யாழ்.குடா­நாட்டில் “ஆவா குறூப்”, “ரொக்டீம்” போன்ற குண்டர் குழுக்கள் உரு­வாக கார­ண­மாக உள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாஹல ரட்­நா­யக்க தெரி­வித்தார். 23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யிலேயே அமைச்சர்...

முதலமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதம்!! : பின்னணியில் மத்திய அமைச்சர்?

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இரகசிய முயற்சிகள் நடந்து வருகின்றன. விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார். வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்யை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டுமென கோரியே இவ் உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை வவுனியா றோயல் காடின் மண்டபத்தில்...

படகில் இருந்தவர்கள் சிறீலங்காவில் சித்திரவதைக்குட்பட்டவர்கள்– தி கார்டியன்!

இந்தோனேசியாவில் தரைதட்டிய படகில் இருந்த தமிழ்அகதிகள் பலரும், சிறிலங்காவில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர், தி கார்டியன் நாளிதழிடம் தெரிவித்துள்ளார். கரிகாலன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்திய அவர், 2010ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா வந்து அடைக்கலம் தேடினார். சிறிலங்காவில்...

மாணவிகளுடன் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்த ஆசிரியர் கைது

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும்...

முல்லைத்தீவில் மகாவலி எல் வலயம்: 2,156 ஏக்கர் காணி அரசாங்கத்தால் அபகரிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கையில், 1984ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அம்மக்கள் இடம்பெயரும்போது அக்காணிகள் அனைத்தும் அவர்களுடையதாயிருந்தது. அதுமாத்திரமின்றி 1984ஆம் ஆண்டு அந்தக் காணிகளே...

மாணவிகள் மீது பாலியல் சேட்டை புரிந்த ஆசிரியர்; பெற்றோர் போராட்டம்

யாழ்.காங்கேசன்துறை வீதியில் உள்ள பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பாக வலய கல்வி பணிமனை உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரியுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts