Ad Widget

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகு மீன்பிடிக்கு அனுமதி!

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லையென இந்திய இலங்கை மீனவர்களின் நலன் பேணல் மன்றத்தின் இலங்கை ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாக பல இந்திய மீனவர்கள் சிறீலங்காக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டனர்.

எனினும் நீண்டகாலமாக நிலவும் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாகவே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயம் பேசப்பட்டதாக தெரிவித்த அவர், வட மாகாண மீனவர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

Related Posts