ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனை, குறிப்பாக பொறுப்புக் கூறல் செயற்படுகள் தொடர்பில், தமக்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.