சுவிஸ்குமாரின் தாயார் சிறையில் மரணம்!

புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில், மாணவியின் தாயை மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரின் தாயார் யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். மகாலிங்கம் தவநிதி என்பவரே உயிரிழந்த பெண்ணாவார். கடந்த மே மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு...

தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு!!– சம்பந்தன்

தமிழர்களின் தேசிய பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு இந்த ஆண்டுக்குள் தீர்வு கிடைத்துவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதுடன் இந்நடவடிக்கையைக் குழப்ப முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ முயன்று வருவதால் தமிழ்மக்களை நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது ஆகிய...
Ad Widget

கதிர்காமத்துக்குச் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்!

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, நேற்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம், கதிர்காமம் ஏழுமலைக்குச் செல்லும் வாகனத்திற்கு முந்திச்செல்ல இடம்கொடுக்கவில்லையென இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது,...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதல், கூட்டமைப்பு அதிர்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, காயமடைந்த மாணவர்கள் தொடர்பிலும், முன்னெச்சரிக்கையாக சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை தொடர்பாகவும் தாம் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சமூகத்துக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதனூடாக மாத்திரமே...

யாழ் பல்கலைக்கழகத்தில் மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் நிறுத்தம்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து கவலையடைவதாக அப் பல்கலைக்கழகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்ற கையெழுத்துடன் குறித்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்...

யாழ் பல்கலைக்கழக மோதல் ; விசாரணைக்குழு அமைக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரைணை மேற்கொள்ள தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வசந்தி அரியரட்ணம், பீடாதிபதிகள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கு இடையில் நேற்றை மோதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று காலை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதன்போது பல்கலைக்கழத்திற்கு முன்னால் மற்றும்...

70 இலட்சம் பெறுமதியான கொள்ளையிடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்ட சுமார் 70 இலட்சம் பெறுமதியான நகைகளை கைப்பற்றியுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்துள்ளதாக யாழ்மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஞீவ தர்மரட்ணவின் வழிநடத்தலில் யாழ்...

காணாமல் போனார் காரியாலயம் : கருத்தறியும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் கருத்தறியும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய குழு இன்று காலை 9.30 முதல் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் முதல் கட்டமாக, காணாமல்போனவர்களின்...

தமிழ், சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் மோதல் இடம்பெற்றதால் யாழ்.பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 2 ஆம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றவேளையிலேயே இம் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று குறித்த நிகழ்வில் தமிழ்கலாசார முறைப்படி மேளதாள வாத்தியங்களோடு மாணவர்களின் வரவேற்கு நிகழ்வு...

படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவம்

வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலய எல்லைகளிலுள்ள படைமுகாங்களை பலப்படுத்தப்படுத்தும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்காலிகமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலய எல்லை வேலிகளையும் நிரந்தரமாக அமைக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் இராணுவத்தினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளில் உள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளே இராணுவத்தினரால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. வலிகாமம் வடக்கு இராணுவ...

யாழ்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்

யாழ்ப்பாண மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரீ.கனகராஜ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து காணிப் பிணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் கல்வித் திணைக்களத்திற்கும் கல்வி உயர் அதிகாரிகளுக்கும் எதிரான அதிகளவிலான முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்திலிருந்து வருவதாக...

வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது இலங்கை அரசே!

போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, இலங்ப்கை அரசைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பில், போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதி்பதிகளை உள்ளடக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப்...

மாணவனது மரணத்தில் சந்தேகம் ; மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் அராலி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனது உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த 16 வயதுடைய ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும்...

பொருளாதார மத்திய நிலையம்: வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும்

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது குறித்து வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீர்மானிக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முடிவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பாதா அல்லது தாண்டிகுளத்தில்...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை இல்லாது செய்ய முயற்சிக்கிறார்கள்

பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்பது தொடர்பில் நடாத்திய வாக்கெடுப்பானது, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக இருக்க முடியாது என வடமாகாண சபையின் எதிர்கட்சியின் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ் யூரோவில் மண்டபத்தில் நடைபெற்ற வடமாகாண மக்கள் செயற்றிட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். வவுனியா பொருளாதார...

சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்றோர் விபரங்களை வழங்கிய கட்டளைத் தளபதி

வட்டுவாகலில் சரணடைந்தோர் விவரத்துக்குப் பதிலாக புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கொண்டு வந்த முல்லைத்தீவு 58ஆம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தனவை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் கோபமடைந்து ஏசினார். இறுதி யுத்தத்தில் காணாமற்போன அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் (சின்னத்துரை சசிதரன்) உள்ளிட்ட 05 பேரின் உறவினர்கள் தாக்கல்...

இராணுவ கட்டளைத் தளபதி மன்றில் ஆஜர் : சரணடைந்த போராளிகள் விபரம் வெளியாகலாம்!!

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக இராணுவ...

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

"இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.'' இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய...

போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை தப்பிக்க முடியாது! ஐ.நா.

இலங்கையில் போரின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்து இலங்கை அரசு உறுதியாக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ - மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கேள்வியொன்றிற்கு...

கொத்துக்குண்டு பாவனை சட்டவிரோதமானதல்ல! கண்டனங்கள் மத்தியில்மீண்டும் பரணகம

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம கொத்துக்குண்டு பாவனையை நியாயப்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், தனது கருத்தை நியாயப்படுத்தி மீண்டுமொரு அறிக்கையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் இலங்கை படையினர் கொத்துக்குண்டுகளை பாவித்திருந்தால் அது தவறானதல்ல என்பதே அவரது வாதமாகும்....
Loading posts...

All posts loaded

No more posts