- Thursday
- July 31st, 2025

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர். இலங்கையர் இருவர் உள்ளிட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகம் கூறுகிறது. அந்த இருவருடைய குடும்பத்திற்கும்...

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம் தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும். யார் அவர்கள் ? கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை...

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் மன்னார் உயிலங்குளம் அருட்தந்தையின் பாதுகாப்பில் இருந்த நிலையில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மதுவந்தி நேற்று வியாழக்கிழமை மன்னார்...

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இலங்கையின் ஆண்கள்...

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து...

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு...

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பேரணியில் மாணவர்கள், பொது...

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் நேற்று நள்ளிரவு முதல் காணாமல் போயுள்ளார். இவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனது கணவருக்கு தொடர்ச்சியாக விடுத்துவந்த அச்சறுத்தல் காரணமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்...

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்புக்கு இலங்கையில் இடமேயில்லை! ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு பதில்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பை நிராகரிக்கும் அரசு, உள்நாட்டு நீதிக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும், இது தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டது. இலங்கை மீது குற்றச்சாட்டுக்களைச் முன்வைக்கலாம். ஆனால், இலங்கையின் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் சட்டரீதியான முறைமை சர்வதேசத்திற்கு இல்லை என்றும் அரசு...

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல்...

இலங்கை அரசு நல்லிணக்கத்தை எட்டுவதில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கடந்த ஆண்டு தீர்மானத்தை...

நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்புறப்படுத்தமை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக கணிப்பிடப்பட்டுள்ளது. வழமை போன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன், சிறீதரன் போன்றோர் தமது சொகுசு வாகனங்களில் வந்திறங்கி கைகளில் எடுத்து வந்த பேனர்களை பிடித்தவாறு மக்கள் போராட்டத்தினை வழிநடத்த...

அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5...

மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ்...

எனது கணவர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் கடந்த அரசும் (மஹிந்த அரசு), ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுமே காரணம் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "கடந்த அரசு செங்கோலை வைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தது....

இலங்கை, அதன் இராணுவ படைகளை கட்டுப்படுத்துவதோடு, போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், தமிழ் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்களான ஒரு பயனுள்ள இடைக்கால நீதி பொறிமுறையின் கீழ், சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும், என,...

வலி.வடக்கில் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர். அதனை அடுத்து அப்பகுதிகளை...

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான மற்றும் நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலக விசாரணை அவசியம் என ஐநா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா...

யாழ்ப்பாணத்தில், மீள்குடியேறுவதற்கான காணி இல்லாத மக்களுக்கு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை அண்மித்தப் பகுதியில் காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது' என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இதற்காக, 140 ஏக்கர் காணியைப் பெறுவதற்குரிய அனுமதியை, மீள்குடியேற்ற அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் அவர் கோரினார். அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்ற பின்னர், காணியில்லாத குடும்பங்களுக்கு...

காரைநகர் ஊடாக வவுனியாவிற்கான சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.15 இற்கு இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் வரணி கொடிகாமத்தினைச் சேர்ந்த கதிர்காம குமார் குலசிங்கம் (55) யாழ்.போதனா வைத்தியசாலையில்...

All posts loaded
No more posts