குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கப்பட வேண்டும்!

இராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு...

முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தக் கைது தொடர்பில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா...
Ad Widget

சடுதியாக விலை அதிகரித்தச் செல்லும் அத்தியாவசிய பொருட்கள்! மக்கள் கவலை

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரிசி, சீனி, மரக்கறிவகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரிதகதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ...

ஒரு சாதாரண விடயத்தில் கூட ஒருமித்த முடிவு எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முடியவில்லை

பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. முக்கிய தலைவர்கள் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண முதலமைச்சர் என இரண்டு தலைவர்கள. கலந்து கொண்ட கூட்டத்தில் இரு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்வதென்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது. ஒரு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம்...

முப்படையினரும் தொடர்ந்தும் கண்காணிப்பில்!

ஆசிய நாடுகளில் பரவலாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். தற்போது, ஆசிய நாடுகளில் பரவலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுவரும்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...

கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியமைக்கு ஆதாரங்கள் கிடைத்தன

இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்தின் மூலம் உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். 'கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதார பூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில்...

காதல் விவகாரம் : இலங்கை அகதியான இளம் யுவதியை கழுத்தறுத்து கொல்ல முயற்சி

தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....

யாழ் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் அனுஸ்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இன்று யூலை ஐந்தாம் திகதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016...

யாழ். பல்கலைக்கழக விடுதியில் கரும்புலிகள் தின சுவரொட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (July 05) நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்’ எனத் தலையங்கமிடப்பட்டு, ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! மக்ஸ்வல் பரணகம

2010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. எனவே இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம்...

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகு மீன்பிடிக்கு அனுமதி!

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லையென இந்திய இலங்கை மீனவர்களின் நலன் பேணல் மன்றத்தின் இலங்கை ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இந்திய...

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை: தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், மொழிப்பெயர்பாளராகவிருந்த ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கை டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம்...

யாழ்ப்பாணத்தில் பணியாளர்களை தாக்கி இலஞ்சம் பெற பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணத்தில் விற்பனை நிலையமொன்றில், பொலிஸார் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்று அதிகாலை 12.30 அளவில் பொலிஸார் பணியாளர்களை தாக்கியதுடன், இலஞ்சம் பெற முற்பட்டுள்ளார். யாழ். நகரப் பகுதியிலுள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விற்பனை நிலையமொன்றிற்கு...

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்தை திறக்கப்படாதது ஏன்?

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...

யாழில் 800 பேருக்கு வீடமைக்க உதவி

வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. ´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய...

ஐநா யோசனை குறித்த வதந்திகளை மறுத்தது ததேகூ

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனை, குறிப்பாக பொறுப்புக் கூறல் செயற்படுகள் தொடர்பில், தமக்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான...

போராளிகளின் மர்ம மரணம் தொடர்பாக கூறுவதற்கு நான் வைத்தியனல்ல: டி.எம்.சுவாமிநாதன்!

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல...

ஐ.நாவின் புதிய நிலைப்பாட்டை வரவேற்கிறது கூட்டமைப்பு!

மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. எம்மைப் பொறுத்தமட்டில் அவரது வாய்மூல அறிக்கையிலே இலங்கையின் நல்லிணக்கம் மற்றும்...

போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு...
Loading posts...

All posts loaded

No more posts