ஆவா குழு : மற்றுமொருவர் கைது

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...

ட்ரம்பின் ஒத்துழைப்புடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டொனல்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவின் புதிய...
Ad Widget

முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று...

மீண்டும் ஒரு எழுக தமிழ் எழுக்கூடாது என தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள் !

யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...

தமிழர்கள் அனைவரும் புலிகளே!

தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை...

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி...

தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்கவேண்டியது எனது கடமை!

தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில்...

யாழில் தொடரும் கைதுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின்...

தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள்

அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும்...

ஆவா குழு சந்தேகநபர் போதைப் பொருளுடன் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் கபில்தாஸ் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ். பொலிஸ் நிலையத்தின் 4 பேர் கொண்ட பொலிஸ் குழுவினரால் கொக்குவில் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர்...

வட்டுக்கோட்டையில் 20வயது யுவதி கடத்தல்!

வட்டுக்கோட்டை சித்தன்கேணி பிரதேசத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரை சிற்றூந்தில் பயணித்த சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.தனது தந்தையுடன் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த யுவதி கடத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவதியின் காதலன் என்று தன்னை அடையாளப்படுத்தி , யுவதியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரியுள்ளார், எனினும் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக...

ஆவா குழுவுடன் கோட்டாவிற்குள்ள தொடர்பை நிரூபிப்பேன் : ராஜித சூளுரை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே ஆவா குழுவை உருவாக்கி வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் ஆவா குழுவிற்கும் கோட்டாபய மற்றும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இல்லை என...

வடக்கில் கோட்டா துணை இராணுவக் குழுக்களை அமைத்து செயற்பட்டார்: சரத் பொன்சேகா

யாழ்ப்பாணத்தை அண்மைய காலமாக கதிகலங்க வைத்து வரும் ஆவா எனப்படும் குழுவின் பின்னணியில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரே செயற்பட்டு வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர்களே தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு தொடர்பில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஓர் இனவாதி : அமைச்சர் ருவன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஒரு இனவாதி என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அழைத்துள்ளார். ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று யாழ்ப்பாணத்தில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர் என்றும், எழுக தமிழ் பேரணியை ஏற்பாடு...

யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டு; இருவர் படுகாயம்

சித்தன்கேணி - அந்திராணி வாய்க்கால், சங்கரத்தை பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அந்திராணி வாய்க்கால் வீதியில் இளைஞர்கள் மூவர் துவிச்சக்கர வண்டியில் வேலை முடித்து வீடு...

கிளிநொச்சியில் பயிற்சி வழங்குவதாக கைதான முன்னாள் போராளி மீது குற்றச்சாட்டு

வெளிநாடு சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார்...

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் : விசாரணயில் CID அதிர்ச்சி தகவல்

யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கையும் அச்­சு­றுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே அக்­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தது. ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின்...

ஆவா குழு முக்கியஸ்தர் கைது?

யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து நேற்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மையில் ஆவா குழுவுடன்...

யாழ் மாணவர்களின் கொலையை நியாயப்படுத்தவே ஆவா குழுவின் கைது : கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

யாழில் பதற்றமான ஒரு நிலைமை உள்ளதாகவும், அங்கு ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக காண்பிக்கவும், இந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே ஆவா குழு என்று கூறி கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த ஏழு கட்சிகள் தீர்மானம்

வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்குவோருக்கு எதிராகவும், அவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏழு கட்சிகள் தீர்மானித்துள்ளன. யாழ். குடாநாட்டைப் பதற்றசூழலில் தொடர்ந்து வைக்க முயலும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலை விரிவாக ஆராய, ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்து, ரெலோ நடத்திய இரண்டு...
Loading posts...

All posts loaded

No more posts