Ad Widget

கிளிநொச்சியில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தையா சபாரத்தினம் (வயது 62) என்ற விவசாயியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது

துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டு, குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்த ஒருவர் இந்தியா தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கிளிநொச்சி நீதவானின் விசாரணையை தொடர்ந்து சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts