- Tuesday
- December 30th, 2025
கடந்த காலங்களை போலல்லாது இம்முறை மாவீரர் வாரத்தை எவ்வித இடையூறும் இன்றி அனுஷ்டிக்கலாம் என பலத்த எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார். உரிமைகளுக்காய் ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வாரம் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதற்கென...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் வைத்து அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கிநின்றபோதே கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த இரத்னசிங்கம் வினோதரன் வயது 32 என்ற இளைஞரே அந்நாட்டு...
இலங்கையர்கள் 32 பேர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வருகின்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், சில இணையத்தளங்கள் போலியான வதந்திகளை...
சிறீலங்காவில் சிங்கள மக்களை அச்சத்தில் உறையச்செய்துவிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ இழைத்த தவறுகளை தாம் உணர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், தவறுகளைத் திருத்திக்கொண்டு தாம் மீண்டும் ஆட்சிபீடம் ஏற மக்கள் தமக்கு வாக்களிக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். முன்னாள் ஆட்சியாளர்...
இனவாதம் பேசுவோருக்கெதிராக எந்தவொரு தயவு, தாட்சயணியமும் பாராது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றித் தெரிவிக்கையில், நேற்றிரவு எட்டு மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில்...
சுவிட்ஸர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு நாட்டை வந்தைடைந்த ஈழத்தமிழர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 9 தமிழர்கள் விஷேட விமானம் மூலம் நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களை நேற்றைய தினமே கைது செய்திருந்த ஸ்ரீலங்கா குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை...
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் 41 பேர் உட்பட ஸ்ரீலங்கா இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான யோகி, புதுவை, எழிலன் உட்பட 41 பேரும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தமைக்கான சாட்சிகள் இருப்பதாக...
“ஆவா“ குழுவின் உறுப்பினர்கள் 11 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
யாழ். மாநகர சபை சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பினால் யாழ். நகர் முழுவதும் கழிவுப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் வயிற்றோட்டம், கொலரா மற்றும் டெங்கு ஆகிய நோய்கள் பரவலாம் என அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை ஆரம்பித்துள்ளதால் கழிவுகள் நீரில்...
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் 62 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 38 பேர் தற்போது வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் அனுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் முதலில் வாள்களை பிரேசிலில் இருந்தே கொண்டு வந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், முன்னதாக இந்தியாவுக்கு அவற்றை...
இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள...
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் முன்னதாக யாழ்ப்பாணம் - சுண்ணாகம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய வேளை, ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணியதாக தகவல் வௌியாகியுள்ளது. இதன்படி தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். மேலும் சந்தேகநபர் முல்லைத்தீவு - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 20...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனல்ட் ட்ரம்பின் ஒத்துழைப்புடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். டொனல்ட் ட்ரம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வௌியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை அமெரிக்காவின் புதிய...
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவரேனும் சமூக விரோதச் செயற்பாடுகளிலோ அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கும் நடவடிக்கையிலோ ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வி அளித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க, இதனை பொலிஸ் அறிக்கைகளிலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்று...
யாழ்ப்பாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்றது போன்ற எழுக தமிழ் பேரணி மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலரும் மிக்க கவனமாக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள்...
தமிழர்கள் அனைவரும் புலிகள் என திட்டிய மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமிழ் மக்கள் உட்பட கெகலியாமடு கிராமசேவகர் மற்றும் அதிகாரிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கச்சக்கொடி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களை...
தமிழ் மக்களுக்காக தமது உயிரைத் தியாகம் செய்துள்ள மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி செலுத்தியுள்ளார். வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான முதல் நாள் விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் அஞ்சலி...
தென்பகுதி மக்கள் சமஷ்டி ஆட்சிக்கும், வடக்கு மக்கள் ஒற்றையாட்சிக்கும் அச்சப்படுவதாக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சமஷ்டி, ஒற்றையாட்சி என்ற இரண்டு சொற்பதங்கள் தொடர்பாக வாதம் நடத்திக்கொண்டிருப்பதை விட அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு புதிய முறை தொடர்பில்...
கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல் நடவடிக்கைகளின்...
அமெரிக்க மற்றும் இந்திய மருத்துவ குழுவினால் தெல்லிப்பளை வைத்திய சாலையில் இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இதன்படி ஐம்பது பேர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் நேற்று (வியாழக்கிழமை) வரை முப்பது பேருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குறித்த சத்திர சிகிச்சை குழு தெரிவித்துள்ளது. சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 100ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும்...
Loading posts...
All posts loaded
No more posts
