வடக்கில் உள்ள விசேடதேவையுடையோருக்கான புனர்வாழ்வுக்கு நிதிவழங்க சுகாதார அமைச்சர் இணக்கம்

வடக்கு மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோருக்கான புனர்வாழ்வு செயல் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரத்த வங்கி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையின் பிராந்திய இரத்த வங்கி சுகாதார அமைச்சர் டாக்டர்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு ஒருமாத கால அவகாசம் தேவை!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதில் கூறுவதற்கு, ஒருமாத கால அவகாசம் தனக்கு தருமாறு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்தார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், 38ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புபோராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள, சுகாதார அமைச்சர்...
Ad Widget

புலிகள் எரித்துப் படுகொலை; இராணுவத்தினருக்கு அதிகுற்றச்சாட்டுப் பத்திரம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரை, எரித்துப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. புலி உறுப்பினர்கள் இருவரும், 1997ஆம் ஆண்டே எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

வட மாகாண முதலமைசரால் ​நேற்று ஜனாதிபதிக்கு பின்வரும் விடயங்கள் தெரியப்படுத்தப்பட்டன. வட மாகாணத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட பிரதிநிதிகளும் சென்ற வாரம் தங்களுடைய அன்புக்குரியவர்கள் காணமற் போனமை பற்றி என்னைச் சந்தித்துப் பேசினார்கள். அதே போல தங்களுடைய காணிகளை விடுவிப்பது பற்றி இடம்பெயர்ந்து வாழ்வோர் என்னுடன் தொடர்புகொண்டார்கள். மேலும் வேலையற்ற பட்டதாரிகளும்...

இலங்கை பாதுகாப்பு பிரிவை எச்சரிக்கின்றது அமெரிக்கா!

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகள் ஸ்ரீலங்காவிலும் பிரவேசிக்கும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலயத்திற்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் ஹெரி பீ ஹரிஸ் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது இலக்கு நாடுகள் மீது தாக்குதலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா போன்ற அமைதி நிலைவும் நாடுகளில் பிரவேசித்து திட்டங்களைத் தீட்டும் முயற்சியில்...

மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு: யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு வகுப்புத் தடையை எதிர்க்கொண்டிருந்த மாணவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்ததையடுத்து, நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக யாழ். மாணவர்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழகத்திற்கான புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்தே இம் மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும்...

விடுவிக்கப்படும் காணிகள் எம்முடையதல்ல; கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம்

முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மக்களுடைய காணிகள் உள்வாங்கப்படவில்லை என நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று 32 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை!!

“யாழ்.மேல் நீதிமன்ற வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மரண தண்டனை வழங்கப்பட்து இன்றைய தினமே” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டி படுகொலை செய்தமை மற்றும் இருவரை கொலை செய்யும்...

கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர்...

வரட்சியினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலையினால் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வரட்சியுடனான காலநிலையினால் 2 லட்சத்து 61 ஆயிரத்து 979 குடும்பங்களைச் சேர்ந்த 9 லட்சத்து 66 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வரட்சியுடனான காலநிலையினால் வட மாகாணத்தில் ஒரு லட்சத்து...

நாட்டில் சுமார் 8 லட்சம் பேருக்கு மனஅழுத்தம்!

இலங்கையர்களில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயாளர்கள் என கொத்தலாவல பாதுகாப்பு சேவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மனநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் நீல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதில், அதிகமானோர் சிசிக்சைகள் எதுவுமின்றி வாழ்ந்து வருவதாகவும் அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டியுள்ளார். மனஅழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த மனநோய், இருதய அடைப்பு,...

முக்கொலைகளையும் நானே செய்தேன்!

நான் செய்தது பெரிய குற்றம், மூவரது மரணத்திற்கு காரணமாய் இருந்துள்ளேன். நான் செய்ததை நியாப்படுத்த முனையவில்லை என முக்கொலை வழக்கின் எதிரி தனது சாட்சியத்தில் தெரிவித்து உள்ளார்.கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா....

யாழ். மாட்டத்திற்கு அரசிடம் இருந்து புதுவருட பரிசு

யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாறாக பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தேர்தல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு குறைக்கப்படும் ஒருவரது சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இதுவரை இருந்த 09 உறுப்பினர்கள் என்பது 08 உறுப்பினர்களாக குறைக்கப்படும். யாழ்ப்பாண...

எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தயாரில்லை: ஜனாதிபதி

தாய்நாட்டுக்காக போராடிய எந்தவொரு படைவீரரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அரசாங்கம் தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியின் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தாக்குதல் மற்றும் விருசர சலுகை அட்டைகளை படைவீரர்களுக்கு வழங்கும் நிகழ்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி...

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர்....

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்: வடக்கு முதல்வர்

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் எனவும், காணாமல் போனவர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போராட்டத்தை நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வடமாகாண முதலமைச்சர் தனது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்தச்...

முள்ளிக்குள மக்களைச் சந்தித்தார் ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 7 ஆவது நாளாகவும் இன்றும் (புதன்கிழமை) முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில் குறித்த மக்களை நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, அவர்களது நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்....

போரின் போது ஆங்காங்கே குற்றங்கள் இடம்பெற்றது உண்மையே : கோத்தாபய

போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார். சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும் நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன். நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால்...

போரின் போது குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும்: வடக்கு முதல்வர்

போரின் போது குற்றம் இழைத்தவர்களை அடையாளம் கண்டு தண்டிக்க வலியுறுத்துகின்றோமே தவிர ஒட்டுமொத்த ராணுவத்தினரையும் தண்டிக்குமாறு வலியுறுத்தவில்லை. அதனையே சர்வதேசமும் வலியுறுத்துகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ .வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சுவிஸ்நாட்டின் இலங்கைக்கான தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். அந்த...

வட்டுவாகல் பிரதேசம் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்றது!

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ள பிரதேசம், பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற பிரதேசம் என கடற்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 372 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய 617 ஏக்கர் காணியில் வட்டுவாகல் கடற்படைத்தளம் அமைந்துள்ளது. இப்பகுதியில், பொதுமக்களுக்கு சொந்தமான 600 வரையான கால்நடைகளும் உள்ளன. இவற்றை பொது மக்கள் விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியபோதும்...
Loading posts...

All posts loaded

No more posts