மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கவுள்ள வடக்கு, கிழக்கு

வடக்கு கிழக்கு மாகாணங்கள் அடுத்துவரும் மாதங்களில் மிகப்பெரிய நீர்ப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். சித்திரை சிறுமாரி சிலவேளை பெய்யாவிட்டால் அல்லது தீவுப் பகுதிக்கு முதலாவது இடைநிலைப் பருவகால மழை கிடைக்காவிட்டால், மே ஆரம்பப் பகுதியில் நீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; வழக்கை கொழும்புக்கு மாற்ற முயற்சி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மரணமானது குறித்தான வழக்கில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும், ஐந்து பொலிஸாரும், தமது வழக்குகளை இடமாற்றம் செய்யுமாறு கோரி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சந்தேகநபர்கள் ஐவரும் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள்...
Ad Widget

போர்க்குற்றம் இடம்பெறவில்லையென யாழில் நான் கூறிவில்லை! : ராஜித

போர்க்குற்றம் இடம்பெறவில்லையென அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்ததாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தான் அவ்வாறு குறிப்பிடவில்லையென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் கருத்து தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்து உரையாற்றிய போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அமைச்சர் ராஜித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

வலி. வடக்கில் 28.8 ஏக்கர் காணி விடுவிப்பு

வலிகாமம் வடக்கில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் நிலப்பரப்பு, நேற்று வெள்ளிக்கிழமை (07) இராணுவத்தினரால், பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊறணி மற்றும் மயிலிட்டிதுறை ஆகிய பகுதிகளே மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில், இராணுவ நடவடிக்கை மூலம் இந்தப் பகுதி, கடந்த 27 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கியிருந்தது. மக்களின்...

அகதிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கையில் அகதிகள் இல்லாத நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர் டெய்ஸி டெல் வலியுறுத்தியுள்ளதாக வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பணிப்பாளர், வட. மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பை தொடர்ந்து...

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை

நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளிக்கு, மரண தண்டனை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமி குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. தீர்ப்பின் பிரகாரம், பாலியல் குற்றசாட்டில் ஈடுபட்டமைக்காக...

மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே காணிகள் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட...

போர்க் குற்றம் இல்லை எனில் அவகாசம் கோரியது ஏன்?

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட...

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள்: பின்னணியில் படையினரா?

யாழில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவற்றை கடத்துவது யாரென்ற விடயம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதானது படையினர் மீதே சநதேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் இன்று ஒன்றரை இலட்சம் வரையான படையினர்...

டெங்கு பலியெடுக்கும் வேகம் மும்மடங்கில் அதிகரிப்பு; 53 பேர் இதுவரை மரணம்

கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் டெங்கு நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மும்மடங்கில் அதிகரித்துள்ளன. இந்த தகவலை சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் பிரீலா சமரவீர வெளியிட்டுள்ளார். உயிரிழப்புக்களைப் போலவும், இந்த நோயினால் பீடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தை விடவும் இந்த வருட முதல்...

சர்வதேச நெருக்குதல்கள் மூலமாகவே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வந்தும் உரிய நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக வடக்கின் பல்வேறு...

நிலக்கண்ணி வெடியை இல்லாதொழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும்: பிரித்தானியா

நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு...

வடக்கில் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டை: உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மீது விசாரணை

வடக்கிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்...

யாழில் புதிதாக தோற்றம் பெற்றுள்ள கப்பம் கோரும் கலாசாரம்!

புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...

சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம் : சம்பந்தன்

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே...

கேப்பாபுலவில் 394 ஏக்கர் விடுவிக்கப்படும்

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு...

வழித்தட அனுமதிப்பத்திரமின்றிப் பயணித்தால் ரூ.2 இலட்சம் தண்டம்!

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று(04) செவ்வாய்க்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச்...

வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி!!

கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை...

ஜனாதிபதியின் கருத்திற்கு தக்க பதில் வழங்குவேன்! சம்பந்தன்

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள்...
Loading posts...

All posts loaded

No more posts