- Tuesday
- August 26th, 2025

சிறுபான்மை மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே வடமாகாணத்தின் எல்லைப் பகுதியிலுள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு கோரி வடமாகாண சபையில் நேற்று (வியாழக்கிழமை) பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மறைமாவட்ட...

இலங்கையில் இடம்பெற்ற போரின்போது, போர்க் குற்றம் இடம்பெறவில்லை என்றால், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று, இலங்கை அரசாங்கம் கால அவகாசத்தைக் கோரியது ஏன் என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தத்தின் போது யார் குற்றமிழைத்தாலும், அது மனித குலத்துக்கு எதிரான குற்றமே. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட...

யாழில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவற்றை கடத்துவது யாரென்ற விடயம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பதானது படையினர் மீதே சநதேகத்தை ஏற்படுத்துகின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே சிறிதரன் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கில் இன்று ஒன்றரை இலட்சம் வரையான படையினர்...

கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் டெங்கு நோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மும்மடங்கில் அதிகரித்துள்ளன. இந்த தகவலை சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் பிரீலா சமரவீர வெளியிட்டுள்ளார். உயிரிழப்புக்களைப் போலவும், இந்த நோயினால் பீடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தை விடவும் இந்த வருட முதல்...

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறி வந்தும் உரிய நிவாரணங்கள் கிடைக்கப்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக வடக்கின் பல்வேறு...

நிலக்கண்ணி வெடிகளை இல்லாததொழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு...

வடக்கிலுள்ள தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் கோரியதாகவும் தமிழ் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்...

புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்...

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே...

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பகுதியில் 394 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்றத்தில் நேற்று(04) தெரிவித்தார். ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட எம்.பி.யான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார். கேப்பாபுலவில் தமது காணிகளை விடுவிக்குமாறு...

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களிடமிருந்து அறவிடப்படும் 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை 2 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று(04) செவ்வாய்க்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச்...

கடந்த மார்ச் 31 ஆம் திகதி நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக மாலதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாலதி நிஷாந்தனிற்கு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிரந்தர வேலை...

போர்க்குற்ற விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு நாளை மறுதினம் (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் உரிய பதில் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணை குறித்து அரச தரப்பினர் வெளியிட்டு வரும் கருத்துகள்...

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பிரதேசத்தில் பிறந்து ஒரு நாள் மாத்திரமே ஆகின்ற சிசு ஒன்றின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மல்லிகைத்தீவு கிராமத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் இந்த குழந்தையை பிரசவித்து, எரித்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்....

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி, அடையாள அணிவகுப்பின் போது தம்மை அடையாளம் காட்ட வேண்டாம் என தெரிவித்து 5 இலட்சம் ரூபா பேரம் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின்...

மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 7ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 7ஆம் திகதி காலை 8 மணிமுதல் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

“பேஸ்புக்கில் (FACEBOOK) அடிமையாகி இருப்பதனால், இலங்கை இளைஞர்களின் பெறுமதிமிக்க இளமைக்காலம் கரைந்தே போய்விடுகின்றது” என, பிரித்தானியாவின் சரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “பேஸ்புக் மட்டுமே சமூக ஊடகமாகும் எனத் தவறாக புரிந்துகொண்டமையால், தங்களுடைய பெறுமதியான இளமை காலத்தை, இலங்கை இளைஞர்கள் இழந்துவிடுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அலைபேசிகளை, சரியானமுறையில்...

சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இனந்தெரியாத நான்குபேர் வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு...

எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட்பீறியுடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த வடக்கு முதல்வர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த...

All posts loaded
No more posts