- Sunday
- December 28th, 2025
இன்புளுவன்சா நோயாளிகளுக்கு வழங்கும் டெம்ப்லு மருந்துக்கு எந்தவொரு பற்றாக்குறையும் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். டெங்கு, வைரஸ் காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா போன்ற நோய்களுக்கு வழங்கும் குறித்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியிருந்தது. இது குறித்து அச் சங்கத்தால் வௌியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த...
யாழ்ப்பாண மக்கள் எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடமே வருகின்றார்கள். நான் அமைச்சரும் அல்ல, அரசியல்வாதியும் அல்ல. ஒரு ஆளுநர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (18) மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆளுநரிடம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பது...
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடு தொடர்பிலான அளவீட்டின் போதே, இந்த அமைதியின்மை இன்றைய தினம் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது. யுத்தத்தினால் கொக்குளாய் பகுதியில் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ் மீனவர்கள் இடம்பெயர்நத நிலையில், தமிழர்களின் கரைவலைப்பாடுகளை நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்துவந்த...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் இயேசுக்கிறிஸ்துவை விமர்சித்து கருத்து வெளியிட்டமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிறேமானந்த சுவாமியுடன் இயேசுவை ஒப்பிட்டு, வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வி தொடர்பில் அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்...
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை நினைத்து தினமும் கண்ணீருடன் வாழும் தமக்கு, தமது உறவினர்களின் நிலை தொடர்பில் அறிவிக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 58வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள...
பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே...
“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது என்னுடைய யுத்தம் மட்டும் அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய பங்குள்ளது” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு நான் இந்தியாவை உதவி செய்யச்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டு நீதிபதிகளை கொண்ட குழுவினராலேயே முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிதம்பரம் ஆலயத்தில் வழிபாடு செய்த அவர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ள நாட்டில் இடம் பெற்ற...
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை என்பது உண்மை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றாரா?” என்பது குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், இறுதி யுத்தத்தின்போது பொட்டு அம்மானின் சடலம் கிடைக்கவில்லை....
வடக்கு காணி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, கள விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தக் கள விஜயத்தின் பின்னரே, காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கமுடியும் என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்பிரகாரம், நாளை 19ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மறுநாள் 20 ஆம் திகதி காலையில் யாழ்ப்பாணத்துக்கும், மாலையில் கிளிநொச்சிக்கும் சென்று...
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின்...
இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, யாழ். மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக திட்டமிடல் துறையில் கல்விபயிலும் மாணவியான அ. ஏஞ்சல் தெரிவித்துள்ளார். அதிகரித்து வருகின்ற காலநிலை மாற்றமே இதற்கு காரணம் என்றும் குறிப்பாக, காடழிப்பு மற்றும் அதிகரித்த வாகனங்களின் பாவனை, நீர் வீண்விரயோகம் போன்ற காரணிகள் வெயில் அதிகரித்தமைக்கான காரணம்...
நாட்டின் சகல பகுதிகளிலும் தீவிரமாக பரவியுள்ள இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகளுக்கு அரச வைத்தியசாலைகளிலும் தனியார் மருந்தகங்களிலும் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறு குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களை இலகுவாகத் தாக்கும் இந்த நோய்க்கு, உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் அது நிமோனியா காய்ச்சலுக்கு வழிவகுப்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளாரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற அந்த அணியைச் சேர்ந்த நபர்கள் தென்னிந்தியா போன்ற இடங்களில் இருந்து மீண்டும் நாட்டுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்துள்ளனரா என்பது பற்றி தாம் பல கோணங்களில்...
இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த காணிகளை நாம் எக்காரணங்கொண்டும் விட்டுக்கொடுப்பதற்கு தயாராக இல்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கவேண்டும்....
நாட்டின் தென் கடற்பரப்பிற்கு அப்பால் பூமியதிர்ச்சி உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பூமியதிர்ச்சி காலி வெலிகம பிரதேசத்திலிருந்து 1512 கிலோமீற்றர் தூரத்தில் இந்து சமுத்திரத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ‘டெங்கு வெக்சியா’ என இந்த தடுப்பூசி...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார். கடந்த வாரம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...
யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியாசாலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
