தீர்வுடன் மீண்டும் சந்திப்பேன்: முள்ளிக்குளம் மக்களிடம் வட. மாகாண ஆளுநர் உறுதி

முள்ளிக்குளம் மக்களின் மண்மீட்பு போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்து, விரைவில் சிறந்த தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட வட. மாகாண ஆளுநர், அங்கு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை...

தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு வடக்கு, கிழக்கு இணைப்பு அவசியம் :முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியமாக உள்ளது என வட. மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துங்கா ஒஸ்காவிற்கும், வட.மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் துருக்கி தூதுவர் வினவியிருந்த...
Ad Widget

நாடுபூராகவும் மீண்டும் கடுமையான வரட்சி, இலட்ச கணக்கான மக்கள் பாதிப்பு

நாடு பூராகவும் உள்ள இலட்ச கணக்கான மக்கள் மீளவும் கடுமையான வரட்சிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கடுமையான வெப்பநிலை நிலவுகின்றமையினால் நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி ஏற்பட்டுள்ளது. எனினும் மே மாதமளவில் பருவ பெயர்ச்சி கால மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் விபரங்கள் சமர்ப்பிப்பு

வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 115 பேரின் பேர் விபரங்கள் வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்திடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தயாகத்தில் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் நடை பெறும் இடத்துக்கு கடந்த மாதம் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ண விஜயம்...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி கடத்தல்!

15 வயது சிறுமி 13 பேர் கொண்ட மோட்டார் ஊர்திகளில் வந்த குழுவினரால் கடத்தப் பட்டுள்ளார். தர்சனா கோவிந்தசாமி எனும் இந்த சிறுமி (April 20, 2017) காலை 10 மணியளவில் பிரமந்தனாறு கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த வேளையிலேயே கடத்தப்பட்டுள்ளார். இவர் உரித்திரபுரத்திலுள்ள மகாதேவா இல்லத்தில் வசித்து கல்வி பயில்பவரெனவும் விடுமுறைக்காக...

பலாலி விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளை விடுவிப்பது பற்றி தீர்மானமில்லை

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை!

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு...

மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா?

“மீதொட்டமுல்லயில் இறந்தால் மட்டும்தான் உயிர்களா? எமது பிள்ளைகளின் உயிர்களைப்பற்றி அரசாங்கத்திற்கு அக்கறை இல்லையா? பிள்ளைகளை விசாரணைக்காக ஒப்படைக்கும்போது நாங்கள் மட்டும்தானே கண்கண்ட சாட்சிகள்” என கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்து, அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரகப்...

நில மீட்பு போராட்டத்தை கைவிடாதீர் : முதலமைச்சர் ஆலோசனை

மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை காணிகள் விடுவிக்கப்படும் வரை கைவிட வேண்டாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றயதினம் கேப்பாபுலவு மக்களை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 52 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கும்,...

‘தாக்கியவர்களை கைதுசெய்யும்வரை கடமைக்குச் செல்லமாட்டோம்’ : கிராம அலுவலர்கள்

தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்கள், நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தமது பிரிவுக்குக் கடமைக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். அல்லாரை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள், புதுவருட தினத்தில் இருந்து 3 நாட்களாக, ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலித்ததுடன், இரவு- பகலாக தாமும் பாடி அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில்...

கூட்டமைப்பை சிதைக்கும் எண்ணமில்லை: அனந்தி சசிதரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சி உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள்...

கேப்பாப்பிலவு மக்களுக்கு மாற்றுக் காணிகளே வழங்கப்படும்: இராணுவம் திட்டவட்டம்

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...

கடல்நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் நன்மையே தவிர பாதிப்பில்லை; நராவின் தலைமை அதிகாரி!

கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் மீன் வளங்கள் அதிகரிக்குமே தவிர மீன் வளங்கள் அழியாது என இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வுபிரிவான நராவின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தனம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமராட்சி, மருதங்கேணி...

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

அகிம்சை போராட்டத்தின் மூலம் தமிழர்களின் போராட்டத்தை முழு உலகத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்த அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற இந் நினைவுதின நிகழ்வில், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு,...

‘காணாமல் போன பிள்ளைகள் ராணுவத்தின் பிடியிலேயே உள்ளனர்’ : பெற்றோர்

“எமது பிள்ளைகள் ராணுவத்தினரின் பிடியிலேயே உள்ளனர். இதற்கான போதிய ஆதாரங்கள் காணப்படுகின்ற நிலையிலும் அவர்கள் ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) 59ஆவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது....

சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை தொடரும்

நாட்டில் தற்பொழுது காணப்படும் சூடான காலநிலை அடுத்த மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எமது நாட்டுக்கு சூரியன் உச்சம் கொடுத்திருப்பதும், மாலை நேரத்தில் பெய்வதற்கிருந்த மழை பெய்யாமல் இருப்பதும், மழை மேகங்கள் உயர்ந்திருப்பதும், காற்று குறைந்து காணப்படுவதும் இந்த சூடான கால நிலைக்கு காரணமாகும் எனவும் திணைக்களம் மேலும்...

யாழ்.மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் நிறுத்தம்!

மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்யும் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றய தினம் (செவ்வாய்கிழமை) நடைபெற்ற மேற்படி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பான சாத்தியகூறு குறித்த ஆய்வு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டத்திற்கு...

காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பில் ஜனாதிபதியே முடிவெடுப்பார்: பாதுகாப்பு செயலாளர்

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைப்பது குறித்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் முடிவெடுப்பார் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். நேற்று (செவ்வாய்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல்போனோர் அலுவலகத்தை நிறுவும் சட்டம் கடந்த வருடம் இறுதிப்...

இயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!

கிறீஸ்தவ மக்களின் மனங்களை உண்மையில் புண்படுத்தி விட்டதென்றால் அதற்காக நான் மனவருத்தம் அடைகின்றேன். ஆனால் மன வருத்தம் அடைய வேண்டிய விதத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே என் வாதம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,...

வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்க முடிவு

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அதனை முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பி அதற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அமைச்சரவையின் அனுமதிகள் கிடைத்த பின்னர் அதற்கான விண்ணப்பக் கோரல்கள் இடம்பெறும் என்று சுமந்திரன் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ்,...
Loading posts...

All posts loaded

No more posts