- Sunday
- March 15th, 2026
தேவையான நேரத்தில் சரியான தீரமானங்களை எடுக்கத் தவறியதாலேயே இன முரண்பாடுகள் ஏற்பட்டன. அவ்வாறான தவறான அரசியல் தீர்மானங்களே விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் உருவாக்கியதென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து...
நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் நாட்டில் இல்லாமையினால் அவர்கள் நாடு திரும்பியதும் அவர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவினை கூறுவதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாக ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி , நேற்று (19) மதியம் 12.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்று...
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக அறிவித்துள்ளனர். நேற்று பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழமைபோல கால அவகாசம் கோரிய...
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு 4ஆயிரத்து 999 பேர் உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், இந்த வருடத்தில் 4பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளனர் எனவும் யாழ்.மாவட்ட சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.குடாநாட்டில் உள்ள 14 பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகள் பிரிவின் கீழ் டெங்கு நோய் பரவியுள்ளன. மூன்று நாட்களுக்கு மேல்...
யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான...
பாரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் இறுதிக்கட்ட போரின் போது பயன்படுத்தியதாக ஏற்கனவே பல ஆதாரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுகுறித்த புகைப்பட ஆதாரமொன்று வெளிவந்துள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரான பிரான்ஸிஸ் ஹரிசன் (Frances Harrison), தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில்...
தீபாவளி தினமான நேற்று (புதன்கிழமை) மாத்திரம் இச் சம்பவம் பதிவாகியுள்ளதோடு, படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மற்றும் மந்திகை வைத்தியசாலை ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாள்வெட்டு, கத்திக்குத்து போன்றவற்றிற்கு இலக்காகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ள...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை...
அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து...
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய...
இலங்கையின் தென்னிலங்கையை ஆட்டிப்படைத்த பாரிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு, தற்போது வடக்கு மாகாணத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் தாக்கத்தால், யாழ்ப்பாணத்தில் தாயொருவரும் பாடசாலை மாணவி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். யாழ். பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்று வந்த கணேசமூர்த்தி சாரா (வயது-9) என்ற மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22 நாட்களாக இவர்கள் உணவை தவிர்த்து வரும் நிலையில், இரண்டு கைதிகளுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக...
வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து...
எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தமிழ் மக்கள் யாவரும் இந்துக்களின் கடைகளில் பொருட்களை வாங்கவேண்டுமென குறிப்பிட்டு வவுனியாவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த சுவரொட்டிகளில் சிவசேனா அமைப்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவ் அமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொருள் வணிக நிறுவனத்துக்கு விற்பனைக்கு வருமுன், பல கைகள் மாறியே வருகின்றது. அந்தக் கைகளுக்குள்...
அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநர் றெஜினோல் குரேயை சந்தித்துள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர் கணேஷ் வேலாயுதம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வட – கிழக்கை ‘பௌத்த நாடு’ என்ற அடைமொழியின் கீழ்க் கொண்டுவருவதை நான் கண்டிக்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மற்றைய ஏழு மாகாணங்களிலும் பௌத்தர்கள் அதிகமாக வாழ்வதால் அவற்றில் பௌத்தத்திற்கு முன்னுரிமைகொடுக்கலாம். ஆனாலும், வடக்கு கிழக்கு மாகாணங்களோ சமஸ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்பட வேண்டும...
அனுராதபுரச் சிறையில் உண்ணவிரதம் இருக்கும் கைதிகள், ஈழத் தமிழர்கள் தமக்காக முன்னெடுத்த கடையடைப்பு உள்ளிட்ட ஆதரவுப் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தல் கடும் உடல் நலப் பாதிப்பிற்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர். தமக்கான தீர்வு இனியும் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையிலான கடும் உண்ணாவிரதப் போருக்கு அவர்கள் தயாராகி உள்ளனர். தற்போதைய உண்ணாவிரதப் போரில் தரப்படும்...
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார். யாழ். இந்துக்கல்லூரியின் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை...
நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவே என்னை ஜனாதிபதி ஆக்கினார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, சில பிரச்சினைகள் இடம்பெற்றன. போராட்டங்கள் இடம்பெற்றன. பல வருடகாலமாக அரசியல் செய்பவன் என்ற...
Loading posts...
All posts loaded
No more posts
