Ad Widget

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts