- Monday
- September 8th, 2025

தேசிய தமிழ் தின விழாவிற்கு கலந்து கொள்வதற்காக பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தற்போது விவசாய உற்பத்திகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான புத்தூர், நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை, தேசிய தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா...

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத் திடலில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளார். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்...

"உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை நேற்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்டங்களும், ஹர்தாலும் இடம்பெற்றுள்ள நிலையில் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் வைத்து...

பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய முன்னாள் போராளிகள் எக்காரணத்தைக் கொண்டும் விடுதலைச் செய்யப்படமாட்டார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பியகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் கலந்து கொண்ட போது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கில் நடத்தப்படும் ஹர்த்தால் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த கேள்விகளுக்கு...

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஏ9 வீதியை மறித்து போராட முற்பட்ட யாழ் பல்கலைக்கழக ஊழிய சங்க இணைச் செயலாளரை பொலிஸார் ஒருவர் காலால் தட்டிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடகஅறிக்கை 12-10-2017 வவுனியாமேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்தவழக்குகள் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும்,கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர்கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான...

தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள், யாழ்ப்பாணம் பேருந்து நிலையச் சூழலில் உள்ள 19 கிணறுகளில் இனங் காணப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நுளம்பு, இந்தியாவில் அதிகமாகக் காணப்படும், ‘ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே’ என்ற பெயரைக் கொண்ட, மலேரியா நுளம்பாகும் என்றும் அறியகிடைத்துள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட, அந்த நுளம்பு, பரவுவதை கட்டுப்படுத்தும் அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது...

இலங்கை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் வகையில், வெகுஜன போராட்ட ஒருங்கமைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பொன்று வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலை அடுத்து, குறித்த அமைப்பு உதயமாகியுள்ளது....

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வாழும் பொதுமக்களில் 99 வீதமானோர் நல்லொழுக்கம் மிக்கவர்கள் என்றும், ஒருசிலரின் நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு ஏனையோரை மதிப்பிடமுடியாதென்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக வடக்கில் செயற்படும் வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னணிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு...

இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சண்டையிடுதல், பாடசாலைகள் ஆலயங்களுக்கு இடையூறு விளைவித்தல்,...

கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர்...

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகள் சார்பிலும் யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் மற்றும் அவரது அவரது சகோதரர் சார்பில், அவர்களது சட்டத்தரணிகள் தனியாக மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தோடு குறித்த ஏழு குற்றவாளிகள் சார்பிலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

அனுரபுரம் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13-10-2017) அன்று வடமாகாணம்முழுவதும் பூரண கதவடைப்புப் போராட்டமும் காலை 09:30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை...

யாழ் போதனா வைத்தியசாலை முன்புறமாக 08.10.2017 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்துதல் 2017.10.08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த ஒரு வாரமாக பல்வேறு சமூக வலைத்தளங்கள் ஊடாக 08.10.2017 இல் ஆர்ப்பாட்டம் நடாத்த போவதாக அறிவித்திருந்தார்கள். பொதுமக்களையும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள். ஆனால், அன்றையதினம் பொதுமக்களோ சமூக அமைப்புக்களோ...

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக, இலங்கை கடற்படையினர் போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை அதுமல்பிடிய வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த துப்பாக்கியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த...

முல்லைத்தீவை சேர்ந்த தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சுவிஸ்லாந்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கான காரணத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இரு பிள்ளைகளின் தந்தையான சுப்ரமணியம் கரன் என்ற 38 வயது குடும்பஸ்தர் நேற்றுமுன்தினம் சுவிஸ்லாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் பொலிசாரால் சுட்டுகொல்லபட்டுள்ளார். இவர் புதுக்குடியிருப்பு 6 ஆம்...

எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இறுதித் தருணத்தில் அவருடன் இருந்த ஏனைய...

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான, 6 வட மாகாணசபை...

All posts loaded
No more posts