- Saturday
- August 8th, 2026
அனர்த்த நிலமைகள் குறித்து வட, கிழக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முன் ஆயத்த கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. அவசர நிலமைகள் ஏற்படும் பட்சத்தில் அதை எதிர்கொள்வது தொடர்பில் ஆராயும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும் இல்லத்தை புனரமைப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் கனகபுரம் துயிலும்...
சாவகச்சேரி மீசாலை பகுதியில் நேற்று இரவு 7.30 அளவில் இரு வேறு இடங்களில் வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீசாலை கிழக்கு - மதுவன் சனசமூகப் பகுதியிலுள்ள கடை ஒன்றினுள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழுவினர், அங்கிருந்த இளைஞனை சமாரியாக வெட்டியதோடு, கடைக்கும் சேதமேற்படுத்தி...
எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும், வடக்கு தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட முன்வந்துள்ளதாக பொதுஜன முன்னணியின் வடமாகாண பொறுப்பாளர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஹிந்தவின் காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்...
வடகிழக்கு அலகில் முஸ்லிம் மக்களுக்குசமச்சீரில்லாததனி அலகு உருவாக்கப்படுவதன் மூலமே வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகும் என வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராவாராம் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அவரிடம், வடக்கு,கிழக்கை இணைக்க முனைப்புடன் செயற்படுவதன் காரணம் என்ன என வினவப்பட்டது. இதற்கு பதிலளித்து முதலமைச்சர், வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இணைப்பு இல்லாத...
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேரை காணவில்லை எனவும், 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேபோல் அசாதாரண காலநிலை காரணமாக 14 மாவட்டங்களை சேர்ந்த 61,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி,கண்டி,காலி,மாத்தளை,பதுளை,...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும்...
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் அனைவரும் நாளைக் காலை 7 மணி முதல் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் அரச தாதியர்கள், துணைமருத்துவ சேவையாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடமாகாண...
"வடக்கில் முக்கிய இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. அங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரும் குறைக்கப்படமாட்டார்கள்" என்று நாடாளுமன்றில் அறிவித்தது அரசு. இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் கோரினாலும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவர்களுடன் அரசு சமரசத்துக்குச் செல்லாது என்று முன்னாள் இராணுவத் தளபதியும் இந்நாள் அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றில் இடம்பெற்ற...
யாழ்.கோட்டைக்கு இராணுவம் செல்லாது. அடுத்த சில தினங்களில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. யாழ். கோட்டைக்குள் இராணுவம் முகாம்களை அமைக்கமாட்டாதென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ். கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். எனினும் அவருடைய கருத்திற்கு...
போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் விலை குறைப்பு தீர்மானத்தை மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை...
சுரேஸ் பிரேமசந்திரன், விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்!! தமிழரசு கட்சி அழைப்பு
தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...
யாழில் இடம்பெற்ற பிரதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரும், ஆவா குழுவின் தலைவருமான விக்டர் நிசா எனப்படும் நிசாந்தன் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இன்று (வெள்ளிக்கிழமை) அழைத்துச் சென்றபோது அவர் தப்பிச் சென்றுள்ளார் குறித்த சந்தேகநபருக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றம்...
யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு சிரேஷ்ட...
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுடன், யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) சுமார் 3 மணித்தியாலங்களுக்கு மேல் இச்சந்திப்பு இடம்பெற்றது. வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது, பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில், இவற்றை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து ஆக்கபூர்வமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர் ஒருவர் குறிப்பிட்டார். தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்ட...
ராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு நேற்றய தினம் (புதன்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த...
வரலாற்று தொன்மைமிக்க சின்னமான யாழ்ப்பாண கோட்டையில் இலங்கை படையினரை நிலைநிறுத்துவது குறித்து பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும், இந்நடவடிக்கையை செயற்படுத்துவதில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உறுதியாக உள்ளார். அந்ந வகையில் வடக்கில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை யாழ்ப்பாண கோட்டைக்கு அனுப்பிவைக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஆளுநர்...
நாமே தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கத்தை தான்தோன்றித்தனமாக கைவிடுவதற்கு எமது தலைமைகள் முன்வந்தமையே கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் போரில் வென்றார்கள். எனவே எமக்கு எமது சட்டரீதியான நியாயமானகோரிக்கைகளை அதன்பொருட்டு அரசாங்கத்திடம் முன்வைக்க எந்த உரித்தும் இல்லை என்று எம்மவர் நினைத்தால் அது முற்றிலும்...
”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts
