Ad Widget

தமிழ் அரசியல் கைதியொருவர் விடுதலை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலையில், கடந்த 18 வருட காலமாக இவர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, ஆரம்பத்தில் திருகோணமலை நீதிமன்றத்தில் இவர் தொடர்பான வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பின்னர் கொழும்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த அரசியல் கைதியின் சார்பில், சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மன்றில் ஆஜராகியிருந்தார்.

Related Posts