- Saturday
- April 27th, 2024
கஸ்டப் பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 6 வருடங்களாக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) போராட்டம் மேற்கொண்டனர். 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் பெற்று கடமையாற்றிய இவர்கள், 5 வருடங்கள் என்ற கட்டாயக்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புகளில் கல்விக்கற்கும் மாணவிகளை பாடசாலைப் பணியாளர் ஒருவர், அலைபேசியில் மறைமுகமாக புகைப்படங்கள் எடுத்து வருவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்வி அபிவிருத்திக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரம் மற்றும் உயர்தரத்தில் கல்விக்கற்று...
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து, செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை செயலர், தம்பு சேதுபதி கூறியதாவது: வட மாகாணத்தில், கட்டி வரும் வீடுகளை...
கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ள தகுதியிருந்தும் வீடுகள் கிடைக்காத தனி நபர் மற்றும் இரண்டு அங்கத்தவர்களைக் கொண்டோரின் விவரங்களை பிரதேச செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் மிகவும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடும்...
காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருத்துவமனையில் காலமானார். 1924 ஆண்டு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை – கரம்பொன்னில் பிறந்த சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் லண்டன், கென்யா போன்ற நாடுகளில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய அவர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன்...
இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. மேற்படி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து...
வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...
வருடந்தோறும் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிகெட் சுற்றுப் போட்டி 2015 நேற்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நேற்று காலை ஒன்பது மணிக்கு இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் குமார் சங்ககார விசேட அதிதியாக கலந்துகொண்டு முதலாவது போட்டியை ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்ற இடங்களில்...
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுறவுப் பாலியல் வல்லறுவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு வன்னிப் பிரதேசத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோது, இராணுவத்தினரால், விசுவமடு பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாயார் ஒருவர் கூட்டுப்பாலியல்...
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலையாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்துசபையினரின் ‘யாழிலிருந்து கொழும்பு வரையான பாதயாத்திரை’ வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை நேற்று (06.10.2015) சென்றடைந்தது. பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்களை குளிர்பானம் வழங்கி வரவேற்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டார். இக்கடினமான நீண்டதூர பாதயாத்திரையை முன்னெடுத்துவரும் இலங்கை போக்குவரத்துசபையை...
பப்பாசிப்பழ ஏற்றுமதியில் வவுனியா வடக்கு விவசாயிகள் அபார சாதனை படைத்திருக்கிறார்கள். நடப்பு 2015 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாவுக்குப் பப்பாசிப் பழ விற்பனை இடம்பெற்றுள்ளது. வவுனியா வடக்கில் பப்பாசிச் செய்கையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் தனித்தனியாகப் பிரிந்துநின்று இயங்காமல் பழச் செய்கையாளர் கூட்டுறவு அமைப்பாகச் செயற்பட்டதாலேயே இது சாத்தியமாகியது. இது கூட்டுறவுக்குக் கிடைத்த ஒரு வெற்றி...
"எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. இன்று உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுடன் நல்ல நட்பாக உள்ளன என்பதுடன் எம்முடன் இணைந்தும் செயற்படுகின்றன. எனவே, இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு இதுவே நல்ல சூழல். இதுதான் சரியான யுகம். இந்த அரசின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்கவேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனைப்...
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற தொனிப் பொருளில் ஆரம்பான தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் அவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி இரணைமடு வட்டக்கச்சியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த...
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...
வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபா வீதம் 2.5 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. வவுனியா முத்தையா மண்டபத்தில் வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் கூட்டுறவுதின விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (04.10.2015) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போதே, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியமை மற்றும் அவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி,...
மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி...
தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என...
Loading posts...
All posts loaded
No more posts