Ad Widget

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி முதியவர் பலி

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி உதயநனகர் கிழக்கைச் சேர்ந்த இராமசாமி பழனியாண்டி (76) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அருகில் உள்ள கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு வாகனம் இன்றி நீண்ட நேரமாக புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டிருந்து.

இதனையடுத்து பொலீஸார் குறித்த சடலத்தை பொறுப்பேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Related Posts