Ad Widget

முல்லை பிரசாந்தின் குருதிபடிந்த மண் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு

நேற்றய தினம் 6-12-2015 அளம்பில் றோ.க.த.க பாடசாலையில் இடம்பெற்ற கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக செல்வராசா கஜேந்திரன் அவர்களும் அளம்பில் றோ.க.த.க பாடசாலை அதிபர் அல்பிரட் மற்றும் அளம்பில் தேவாலய பங்குத் தந்தை அவர்களும் கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் கவிஞர் வேல் நந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நூலிலன் முதற் பிரதியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வெளியிட்டுவைக்க அளம்பில் றோ.க.த.க பாடசாலை அதிபர் அல்பிரட் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Related Posts