- Saturday
- June 21st, 2025

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார்தெரிவித்துள்ளார். ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனதுதையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாககடந்த சனிக்கழமை சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் அன்றையதினமே நெடுங்கேணி பொலிசில்...

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள். இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த...

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தந்துதவுமாறும் கோரியுள்ளனர். ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை 11.06.2016 அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்றபோது காணாமல் போயுள்ளார். இவ் யுவதி...

கிளிநொச்சி கண்டாவளை மகா வித்தியாலயத்தைச் சேரந்த 23 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை (13) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மேற்படி பாடசாலை வளாகத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து வகுப்பறைக்குள் குளவிகள் புகுந்துள்ளன. அதன்போதே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள்...

யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி துரிதமடைகிறது. வடக்கு கிழக்கில் மீள்கட்டுமானங்கள் சிறப்பாக நடக்கிறதென அரசு சொல்லித்திரிந்தாலும், யதார்த்தமென்னவோ வேறாகத்தான் இருக்கிறது. யுத்தத்தால் சிதைவடைந்த பகுதி மக்களின் வாழ்க்கையும் சிதைவடைந்துதான் கிடக்கிறது. அரசின் எந்த புனரமைப்பு திட்டமும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவவில்லையென்பதே யதார்த்தம். யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலொன்றான முல்லைத்தீவில் நடக்கும் இந்த அதிர்ச்சி சம்பவங்கள் அபிவிருத்தி...

அண்மையில் இடம்பெற்ற சலாவ வெடிவிபத்தையடுத்து தென்பகுதியில் இருக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் அனைத்தும் தற்போது வடபகுதிக்கு மாற்றப்பட்டுவருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே புதிய ஆயுதக் களஞசியங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சன அடர்த்திகூடிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியத்தையும் வேறு...

எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதலமைச்சர்...

யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23...

யுத்த காலத்தில் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி உடலில் செல் துகள்களுடன் வாழும் மாணவ மாணவியர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவேளையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் உடல் அவயமொன்றிலிருந்த செல் துகள்களை ஒரு பாடசாலை மாணவன் 5...

வட மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் நிலப்பரப்பு அளவில் முதலிடத்தில் இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இலங்கையிலேயே நிலப் பயன்பாட்டில் பெரும்பகுதி காடுகளால் நிறைந்துள்ள மாவட்டங்களில் முல்லைத்தீவு முக்கியமானது. இங்குள்ள காடுகளில் வைர மரங்களான முதிரை, பாலை, வீரை, காட்டாமணக்கு, ஒதி முதலிய மரங்கள் இயற்கையாக காணப்படுகின்றன. அவற்றை விட. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தேக்கு மரங்கள்...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசோதகர், மூன்று நாள் காய்ச்சலை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததால் அவரது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ராசா றமணி என்பவர் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு,...

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், அவரது கணவர்...

கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 'கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி...

வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக்...

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், இன்று வியாழக்கிழமை (02) நடைபெற்றது. இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு வைத்தியசாலை காணி தொடர்பில், நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சர்ச்சைகள் தொடர்பாக, இந்த கூட்டத்தின் போது...

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பயங்கரவாத தடைச்...

கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிறந்த படைப்பாளி உருவாகவேண்டும் என்றால் அவர் ஈழத்திலிருந்தே உருவாகவேண்டும் எனத் தென்னிந்திய திரைப்படநடிகரும், நடிகர் சங்கத் தலைவருமான நாசர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஒரு படைப்புக்கு வலி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு...

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் இருந்து ஒரு தொகை வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 கிளைமோர் குண்டுகள், 65 கைக்குண்டுகள் மற்றும் மோட்டார் குண்டுகள் போன்றவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அப் பகுதியிலிருந்த கிணறு ஒன்றில் இருந்து இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் விளைவால் தமிழ் மக்கள் அதிகளவுக்கு பல இழப்புக்களைச் சந்தித்துள்ள நிலையில் 282 போ் தங்களுடைய கண்களை இழந்துள்ளமை பதிவாகியுள்ளது. யுத்தம் பலரை பலியெடுத்துள்ள நிலையில் மிஞ்சியிருப்பவா்களில் பெரும்பாலானவா்கள் தங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தை இழந்தவா்களாவும் காணப்படுகின்றனா். அத்தோடு பெரும்பாலானவா்கள் இரும்புத் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் வாழ்ந்து வருகின்றனா். இந்த...

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக...

All posts loaded
No more posts