Ad Widget

தொடரும் முன்னால் போராளிகளின் மரணம்

சமீபத்திய காலமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னால் போராளிகளின் மரணங்கள் மீதமிருக்கும் போராளிகளின் மனதிலும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது இந்த வரிசையில் முன்னால் போராளியும் பொட்டம்மானின் சாரதியாக இருந்த சசிகுமார்(ராகுலன்) என்பவரும் காலமாகியுள்ளார்

தொடரும் இந்த மரணங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்ன? என்பது விடையில்லா புதிராக உள்ளது போராளிகள் புனர்வாழ்வளிக்கப்படும்போது இராணுவத்தினரால் திட்டமிட்டு ஏதேனும் விஷமருந்துக்கள் இவர்களது உடலில் செலுத்தப்பட்டுள்ளதா?என்ற கேள்வியும் எழுந்துள்ளது இவர்கட்கு குரல் கொடுக்க யார் முன்வரப்போகிறார்கள்?

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்று மக்களால் முன்மொழியப்பட்டனர் அந்த விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர்?

Related Posts