- Monday
- June 9th, 2025

அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின் ஆளுநரின் அனுமதியைப் பெற்று தான் வெளிநாடு செல்ல வேண்டும் மாறாக வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் ஆளுநருக்கு அறிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றமை தொடர்பில் இதுவரையில் வட மாகாண ஆளுநருக்கு அறிவித்தல் விடுக்கவோ அனுமதி...

வட மாகாண சபையின் புதிய பிரதி அவைத் தலைவராக வல்லிபுரம் கமலேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வடமாகாண பிரதி அவைத் தலைவராக கடமையாற்றிய மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் கடந்த 07 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து வட மாகாண சபைக்கான பிரதி அவைத் தலைவரை தெரிவு செய்து குறித்து இன்று கலந்துரையாடப்பட்டது. இதன்போது, வட மாகாண...

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்தை எதிர்த்து, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பதில் முதலமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் இணைத்தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது,...

கடந்த 20ம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , இரு பல்கலைக்கழகமாணவர்களின் அநியாயமானஅகாலமரணம் ஆழ்ந்ததுயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது....

குற்றங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் பொலிஸாரின் வரம்பு மீறிய செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என வட மாகாண பதில் முதலமைச்சர் த. குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சி. தவராசா ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். அவசரகாலச்சட்டம் அமுலில் இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்திக் கொலை செய்த சம்பவத்தை, ஏற்றுக்...

வடமாகாண சபையின் பேரவைச்செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் பேரவைச்செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வடமாகாண சபை பேரவைச்...

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் விசேட செயற்திட்டமொன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்திட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த...

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பி ராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாட்டுப்பயணம் சென்றுள்ளமையினால் அவரின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும்,...

வட மாகாண சபையின் உப தலைவரை நியமிக்கும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வருவதாக, சபையின் உறுப்பினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வட மாகாண சபையின் உப தலைவராக இருந்த அன்டனி ஜெகநாதன் அண்மையில் காலமானதை அடுத்து இதுவரை அந்தப் பதவிக்கு பிறிதொருவர் நியமிக்கப்படவில்லை என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்...

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிராதன பிரச்சினைகளான காணி கையகப்படுத்தல் மீள்குடியேற்றம், காணாமல்போனவர் விவகாரம், மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்காத நிலையில் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாது என வடமாகாண அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையின உரிமைகள் தொடர்பான விஷேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா நேற்று...

வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையால், தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு மேலதிகமான பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானமே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்து, பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) பூஜித் ஜயசுந்தரவுக்கு, கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், வடமாகாண சபையின் தலைவர் சி.வி.கே சிவஞானம்...

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோன் டோடேம் (Jorn rohdem) நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இவர் நேற்று மாலை 05.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு சென்று முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் ஜேர்மன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், மாவட்ட...

வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடிகளை விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மீது ஏதாவது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அவர்கள் தொடர்பாக தபால் மூலமோ அல்லது நேரிலோ தெரிவிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக தனக்கு...

சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தினை மனிதாபிமான ரீதியில் அணுகுமாறு அரசாங்கத்தையும் தோட்டமுதலாளிமார் சம்மேளனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆயிரம் ரூபாசம்பள உயர்வும் 18 மாதங்களுக்கான சம்பள நிலுவையும் வாரத்தில் 06 நாட்கள் தொழிலும் கிடைக்கப் பெறுவதை உறுதிப்படுத்துமாறு கோரி தொடர்ந்தும் 12 நாட்களாக மலையக தோட்ட தொழிலாளர்கள்...

வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அவருடைய பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின் ஆரம்பத்தில் உயிரிழந்த பிரதி...

காலமான, வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெகநாதனுக்கு வடமாகாண சபையில் இன்று வியாழக்கிழமை (06) அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1 ஆம் திகதி முள்ளியவளைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும் போது, மாரடைப்பு ஏற்பட்டு கீழே வீழ்ந்து எம்.அன்டனி ஜெகநாதன் உயிரிழந்திரு்தார். அவருடைய இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள நிலையில், வடமாகாண...

வடக்கு மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனின் இறப்பையடுத்து அவரது கதிரைக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமக்குள் முட்டிமோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது வெற்றிடமாகியுள்ள பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரே நியமிக்கப்படவேண்டுமெனவும் குரல்கள் வலுத்துள்ளன. இருப்பினும், பிரதி அவைத்தலைவர் வெற்றிடத்துக்கு கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரியரத்தினத்தை நியமிக்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்க பின்னடித்து வருகின்றது. இருப்பினும் முதலமைச்சர் நிதியத்துக்கான அனுமதியை விரைவில் அரசாங்கம்...

அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்தி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடயங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர்...

All posts loaded
No more posts