பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்தால் தான் ஒருமித்து வாழ முடியும்!

மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் (Simonetta Sommaruga) தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார். அவ்வாறு இல்லை எனின்...

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். 68 வயதான அன்ரனி ஜெகநாதன், மோட்டார் சைக்கிளில் பயணம்செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சைகளை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண...
Ad Widget

துப்பாக்கிகளை வழங்கிவைத்தார் வடக்கு மாகாணசபை உறுப்பினர்!

விவசாயத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 18 கமக்கார அமைப்புக்களுக்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் துப்பாக்கிகளை வழங்கிவைத்தார். 2016ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சுமார் 5 இலட்சம் பெறுமதியான 18 துப்பாக்கிகளை 18 கமக்கார அமைப்புக்களுக்கு நேற்றையதினம் (புதன்கிழமை) முள்ளியவளை கமநலசேவை திணைக்களத்தில் வைத்து வழங்கினார். அண்மைக்காலமாக குரங்குகளின்...

வடக்கு முதல்வரை கைதுசெய்ய வேண்டுமாம்!: கம்மன்பில கூறும் காரணங்கள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும்...

அரசியல் தீர்வினைப் பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி நீக்லஸ் பேர்னாட் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவஞானம் மேலும் கூறியதாவது, வட மாகாணத்தின் தற்போதைய நிலமை குறித்து ஆராய்வதற்காக அவர்...

பகிடிவதையால் கல்வியை இழந்த மாணவனுக்கு மீளவும் கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு கோரிக்கை

யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை...

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாகாண சபையில் விவாதிக்க முடியாதாம்!!

உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன்...

வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை

வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேற்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு...

உடுவில் மகளிர் கல்லூரி நெருக்கடி நிலைமை தொடர்பாக தவராசா அவசர பிரேரணை

உடுவில் மகளிர் கல்லூரியில் அண்மையில் மாணவிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகவும், அக் கல்லூரியில் பல ஒழுக்க சீர்கேடுகள் நடைபெற்று வருவதாக பெற்றோரினால் கூறப்படும் முறைப்பாடுகள் தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா நாளை 22.09.2016 நடைபெறவுள்ள சபை அமர்வின் போது ஓர் அவசர பிரேரணையைக் கொண்டுவரவுள்ளார். அப் பிரேரணையில் கூறப்பட்டுள்ளதாவது,...

முதல்வருக்கெதிராக மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் அமைச்சர்களைத் திசைதிருப்பு முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு முன்பு நேற்று (19.09.2016) நடத்தப்பட்டுள்ளது. வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சரால்...

வடக்கு விவசாய அமைச்சால் விவசாயக் கிணறுகள் புனரமைப்பு

வடமாகாண விவசாய அமைச்சால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சேதமடைந்த விவசாயக் கிணறுகளைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று திங்கட்கிழமை (12.09.2016) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகவும், போதிய பராமரிப்பு இல்லாமலும் யாழ் குடாநாட்டில் உள்ள...

‘சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பேன்’: சி.வி வாக்குறுதி

உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினை தொடர்பில் சட்டத்துக்கு உட்பட வகையில் தன்னாலான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக, போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்துள்ளனர். உடுவில் மகளிர் கல்லூரி அதிபரான சிராணி மில்ஸை, பாடசாலையின் ஆளுநர் சபை நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 3ஆம் திகதி தொடக்கம் பாடசாலை மாணவிகள் சிலரும் பெற்றோர்களும்...

சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: முதலமைச்சர் சி.வி

'தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற...

இராணுவ முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாகாண நிதியில் சம்பளம்

இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளப் பணம் வடமாகாணக் கல்வி அமைச்சின் நிதியிலிருந்து சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றபோது, அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'கிளிநொச்சி இராணுவப் படைத் தலைமையகத்துக்குக் கடந்த 2013ஆம்...

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

கடந்த வாரம் பூநகரி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனை இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவமதித்தமை தொடர்பாக நேற்றயதினம் வடக்கு மாகாண சபையில் சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பாக பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நேற்றயதினம் வடக்கு மாகாண சபையின் 61 ஆவது அமர்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்...

கேள்விக்குள்ளாகியுள்ள மாவட்ட இணைத்தலைமை பதவி : அனந்தி

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்தும்போது, அதுகுறித்து வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடாமல் பிரதேச செயலாளர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மக்கள் பிரதிநிதிகளான தம்மையும் உதாசீனப்படுத்துவதாகவும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வட மாகாணசபை அமர்விலேயே அனந்தி மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த மாவட்ட ஒருக்கிணைப்புக் குழு கூட்டங்களை வைத்து...

உத்தரவிடும் அதிகாரம் இராணுவத்துக்கு இல்லை

'இராணுவம் தனக்கு காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கவேண்டும். மாறாக அடாத்தாக பிடித்து வைத்து, சுவீகரிக்க முயலக்கூடாது' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின்...

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஐ.நா.செயலர்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கி மூன் அவர்கள் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களை இன்று வெள்ளிக்கிழமை (02.09.2016) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

விச ஊசி விவகாரம், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை ஆரம்பம்!

விச ஊசி விவகாரத்திற்கு தீர்வு காணும் முகமாக முன்னாள் போராளிகளுக்கு இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்...

வடக்கு முதல்வரை தனியாக சந்திக்க ஐ.நா செயலர் ஆர்வம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன், வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) யாழில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பான் கீ மூனின் இலங்கை விஜயம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரலில் சி.வியுடனான சந்திப்பு உள்ளடக்கப்படாத போதிலும் இலங்கைக்கான...
Loading posts...

All posts loaded

No more posts