Ad Widget

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யப்போகும் வட மாகாண முதலமைச்சர்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண சபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்க பின்னடித்து வருகின்றது.

இருப்பினும் முதலமைச்சர் நிதியத்துக்கான அனுமதியை விரைவில் அரசாங்கம் வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் நிதி திரட்டும் நோக்கிலேயே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் முதலமைச்சர் அலுவலகம் இந்தச் செய்தியினை இதுவரை வெளியிடவில்லை.

மேலும், பிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்தியுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வடக்கு மாகாண முதலமைச்சர் பிரித்தானியா செல்கின்றார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இவற்றை முதலமைச்சர் செயலகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts