- Monday
- March 9th, 2026
கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இல்லை. இணைந்து செயற்படப் போவதுமில்லை. நாம் சட்டத்தின் அடிப்படையிலேயே எமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்....
உன்னால் முடிந்தால் செய்; அல்லது செத்துமடி'' என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் தினமும் வையுங்கள். எமது பூமி சுதந்திரக் காற்றை உள்ளேயும் வெளியேயும் இழுத்துவிட வைக்க நீங்கள் தயாராகுங்கள் (more…)
வட மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஞானசீலன் குணசீலன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகிய இருவரும் இன்று முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் கொழும்பில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கடந்த வாரம் நிகழ்ந்த சத்தியப் பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவி விபத்தில் சிக்கியதும், கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என...
விவசாய ,சூழல் அமைச்சு அலுவலக நிகழ்வுகளில் குடிபானங்களை பரிமாறும் போது ”பெப்சி ”கொக்கோ கோலா” போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென் பானங்களை தவிர்க்குமாறும் பதிலாக உள்ளுர் பானங்களை பரிமாறுமாறும் விவசாய ,சூழல் அமைச்சர் ஐங்கரநேசன் பணித்துள்ளார். நேற்று தனது அமைச்சு பதவி பொறுப்புக்களை பொறுப்பேற்கும் வேளையில் இதனை அவர் தெரிவித்தார்.எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை...
நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்தவகையில் புளொட்டின் வட மாகாணசபை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். (more…)
வடமாகாணசபை அவைத்தலைவராக சீ.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழரசுக்கட்சியின் யாழ்மாவட்டக்கிளைத்தலைவரும் முன்னாள் மாநகரசபை ஆணையாளருமாவார். பிரதி அவைத்தலைவராக முல்லைத்தீவு உறுப்பினர் அன்ரனி நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று(9) இரவு நடைபெற்ற கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தின் சந்திப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினமே அமைச்சர்கள் தெரிவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை தெரிந்ததே. வட மாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாளை வெள்ளிக்கிழமை(11) வீரசிங்கம்...
வடமாகாண முதலமைச்சராக சத்திப்பிரமாணம் செய்து கொண்ட க.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராக தனது கடமைகளை இன்று உத்தியோக பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர்...
வடக்கு மாகாண சபை முதலமைச்சருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது வைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபைக் கொடியை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் திடீரென அங்கிருந்து அகற்றினர். (more…)



