Ad Widget

வடக்கு அமைச்சர்களை விசாரிக்கும் குழு செயற்படவில்லையென குற்றச்சாட்டு

வடமாகாண சபை அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரனினால் உருவாக்கப்பட்ட குழு செயற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 3ஆம் திகதி தொடக்கம் இந்த குழு இயங்கும் என மாகாண சபையினால் அறிவிக்கப்பட்டது.எனினும் அவ்வாறான குழு செயற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் ஜீ பி லிங்கநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முறைப்பாடொன்றை முன்வைக்க நேற்றைய தினம் குறித்த குழுவை நாடிச் சென்ற போது அவ்வாறான குழு ஒன்று இயங்கவில்லை என்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ வி கே சிவஞானம் தெரிவிக்கையில் அந்த குழு தொடர்பான தீர்மானம் முதலமைச்சருடையது எனவும் அது சபையின் தீர்மானம் அல்லவெனவும் குறிப்பிட்டார்.எனவே அதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு முதலமைச்சரையே சாருமெனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts