Ad Widget

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கான பாடசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை அழுத்தம்

வடமாகாணத்திலிருந்து 26 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை மூடுமாறு வடமாகாண சபை நிர்வாகம் அழுத்தங்களை பிரயோகிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார்.

resat-pathu

எனினும் வடமாகாண முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், சிக்கல்களுக்கும் வடமாகாண மீள்குடியேற்றத்துக்கான விஷேட அமைச்சரவை செயலணி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என ஸ்ரீலங்கா றிசாத் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

புத்தளம் தில்லையடியில் முன்பள்ளி ஆசிரியர்களையும், இணைப்புப் பாடசாலை ஆசிரியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் றிசாத் பதியுதீன், புத்தளத்தில் இயங்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாடசாலைகள், வைத்தியசாலைகளினால் மேலதிகச் செலவுகள் ஏற்படுவதாக தெரிவித்தே அவற்றை மூடுமாறு வட மாகாண சபை வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியூதின் ”வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக நாம் அன்று தொடக்கம் இன்று வரை முயற்சிகளைமேற்கொண்டு வருகின்றோம்.

அரசாங்கத்தின் உதவியின்றி எங்களது தனிப்பட்ட முயற்சியினால் வெளிநாடுகளிலிருந்தும், அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் நாம் பெற்றுக்கொண்ட உதவியினாலேயே வடக்கிலே பல கட்டடங்களையும்,வீடுகளையும் கட்டினோம். அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அதனால் நாம் படுகின்ற கஷ்டங்களும் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

மீள்குடியேற்றம் தொடர்பில் நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் வவுனியா,மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கணிசமான அளவு குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

மீள்குடியேறச் சென்றவர்கள் சிலர் தொடர்ந்தும் அங்கேயே இருக்கிறார்கள். பலர் திரும்பி புத்தளம் உட்பட தென்னிலங்கை பிரதேசங்களுக்கு வந்துவிட்டனர். காணிப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, குடிநீர், வாழ்வாதார பிரச்சினைகளால் இவர்கள் அங்கு வாழ முடியாது திரும்பிவிட்டனர்.

அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணி, அகதிகளின் பிரச்சினைகளை அடையாளங் கண்டு அவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கும்.

வடக்கு முஸ்லிம் குடும்பங்களுக்கு வினாக்கொத்துக்கள் அடங்கிய விண்ணப்பப் படிவம் ஒன்று விநியோகிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும். மீள்குடியேற விரும்புவோரும், தொடர்ந்தும், தென்னிலங்கையில் தங்க விரும்புவோரும் இதன் மூலம் இனங்காணப்படுவதோடு, வடக்கிற்கு செல்ல விரும்புவோருக்கு உரிய தீர்வுகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கருத்துத் திரட்டலை சுயாதீனமாகவும். சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் பெறப்படும் தரவுகள் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் மீள்குடியேற்ற செயலணி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் என கூறினார்.

Related Posts