Ad Widget

போக்குவரத்துப் பொலிஸாருக்கு 600 சி.சி. மோ.சைக்கிள்கள் கையளிப்பு

வட மாகாண போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் வட மாகாண பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரிவு ரீதியாக புதிய 600 சி.சி. குதிரை வலு வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் (more…)

மீள் குடியமர்த்தக் கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற கோரி நாளை வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் கிளிநொச்சி கச்சேரி முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. (more…)
Ad Widget

திலீபனின் சடலத்தை தேடி வேட்டை

இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத (more…)

30 தமிழ் யுவதிகளின் இராணுவ பயிற்சி நிறைவு

இலங்கை இராணுவத்தில் புதிதாக இணைந்து கொண்ட 30 தமிழ் யுவதிகள், இன்று புதன்கிழமை (02) தங்களது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறினர். (more…)

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கரிசனை காட்டவில்லை – முதலமைச்சர் சி.வி.

அரசாங்கம் பாரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எடுக்கும் கரிசனையை, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாடத் தேவைகள் சம்பந்தமாக காட்டாதிருப்பது மனவருத்தம் தருகிறது (more…)

இருகண்ணிலும் பார்வையிழந்தவரின் மனைவியின் முறையீட்டால் அதிர்ந்த வடக்கு முதலமைச்சர்

“சமூக சேவை அலுவலர் தன்னை பிளானுடன் வருமாறு கேட்கிறார். என்ன பிளான் எதிர்பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” இவ்வாறு வடக்கு முதலமைச்சரிடம் கிருஸ்ணபுரத்தில் இரு கண்ணும் பார்வை இழந்தவரின் இளம் மனைவி முறைப்பாடு செய்துள்ளார். (more…)

பிரதேச வாதத்தை எழுப்பாது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள், முதலமைச்சர் வேண்டுகோள்

பிரதேச வாதத்தை எழுப்பும் அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். (more…)

தமிழர்களின் இன்றைய வறுமைக்கு இராணுவப் பொருளாதாரமே காரணம் – பொ.ஐங்கரநேசன்

இலங்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாகாணங்களில் இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணமும் மூன்றாவது இடத்தில் வடக்கு மாகாணமும் உள்ளது. (more…)

32 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனம்

வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு நடப்பு ஆண்டுக்கான தனது பிரதான செயற்திட்டங்களில் (more…)

இரணைமடுக் குளத்தின் புனரமைப்பில் அனைவரும் அதிக அக்கறை கொள்ள வேண்டும் – சந்திரகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்காக நீரைப்பெறும் மார்க்கமாக அமைந்துள்ள இரணைமடுக் குளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடனும் அக்கறையுடனும் செயற்படவேண்டும் (more…)

புதுக்குடியிருப்பு காணிகளையும் அபகரிக்கிறது இராணுவம்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கிழக்கு கிராமத்தில் உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்துள்ள காணி உட்பட பொதுமக்களுக்குச் சொந்தமான ஏழே முக்கால் ஏக்கர் காணி இராணுவ தேவைக்கு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

அரசியல் ஆதிக்கங்களுடன் முல்லையில் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கம்

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்துகிறோம் என்ற அரசின் போலிகளின் பின்னணியில் நாலாப்புறமும் மக்களின் இயல்பு வாழ்வு சிதைக்கப்படும் திட்டங்களே அரங்கேறி வருகிறன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

சிறிதரன் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!

இனந்தெரியாத நபரினால் தொலைபேசி மூலம் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

துணுக்காய் கருங்கல் சுரங்கங்களை வடக்கு முதல்வர் குழுவினர் பார்வையிட்டனர்

வடமாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, துணுக்காய் பிரதேச செயலர் சி.குணபாலன் உள்ளிட்ட குழுவினர் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பன்றிவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள கருங்கற் சுரங்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17.06.2014) பார்வையிட்டுள்ளனர். (more…)

கிளிநொச்சி வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் விநாயகர்புரம் பகுதியிலுள்ள கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழாவின்போது, இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த ஐவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். (more…)

சமூக சேவைகள் அமைச்சின் பயனை அனைவரும் பெற வேண்டும்

சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் பயன்களை அமைச்சின் கீழுள்ள உத்தியோகத்தர்கள் மூலம் அனைத்துப் பொதுமக்களும் பெறவேண்டுமென (more…)

உண்மையான வரலாற்றை பின்னோக்கிப் பார்க்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

எமது வரலாறுகளை மூடிமறைப்பது அல்லது மறந்து விடுவது பலருக்கு வாடிக்கையாக இருக்கலாம். (more…)

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பாடநூல்களையும் தாண்டிய புதிய சிந்தனை அவசியம் – விவசாய அமைச்சர்

நாங்கள் பாடங்களை இரசாயனவியல், பௌதிகவியல், புவியியல், உயிரியல் என்று தனித்தனியாகப் பிரித்துப் படிப்பதால் பூமியை அதன் முழுமையான பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தவறிவருகிறோம். (more…)

கிளிநொச்சியில் 100 குடும்பங்களே மீள்குடியேறவேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 குடும்பங்களே இன்னமும் மீளக்குடியேற வேண்டியிருப்பதாக கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுரேஷ் எம்.பி. மீது தாக்குதல் நடத்த பொலிஸார் முயற்சி!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராடத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (more…)
Loading posts...

All posts loaded

No more posts