Ad Widget

புதுக்குடியிருப்பில் போலி தாள் : ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் தனது கப் ரக வாகனத்திற்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு 500 ரூபாய் போலி தாள்கள் இரண்டை வழங்கியதாக கூறப்படும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு பிரதேசத்தைச்சேர்ந்த 30 வயதான ஒருவரையே நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவரிடமிருந்து 500 ரூபாய் போலி தாள்ளொன்றையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

Related Posts