Ad Widget

சமூக சேவைகள் அமைச்சின் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்

சமூக சேவைகள் அமைச்சின் புதிய செயலாளராக யாழ். மாவட்ட முன்னாள் செயலாளர் இமெல்டா சுகுமார் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சுக்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் இவருக்கும் நியமன கடிதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு, கிழக்கு காணிகளை விசேடமாக பதிவதற்கு கட்டாயப்படுத்தும் சுற்றுநிரூபத்தை விலக்க அரசு இணக்கம்

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளின் விவரங்களை அதன் உரிமையாளர்கள் பதிவுசெய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் விதத்தில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்தை விலக்கிக்கொள்வதாக அரசு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உறுதியளித்தது. (more…)
Ad Widget

வரைகலை நிபுணர் ஆன்ரோ பீற்றர் இயற்கை எய்தினார்!

இந்தியாவை சேர்ந்த கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், CSE, SoftView நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும் கணினி வரைகலை நிபுணரும் தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆர்வலரும் பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆன்ரோ பீற்றர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். இறக்கும்போது இவருக்கு வயது 45. (more…)

வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் யார்? உறுதிப்படுத்தியது அரச சேவைகள் ஆணைக்குழு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி வேணுகா சண்முகரத்தினம், அதிபர் தராதரத்திலிருந்து அரச சேவையைத் தொடர்ந்து செய்வதற்கு அனுமதி வழங்குவதாகவும், அதற்கு இடையூறாகச் செயற்படின், ஆணைக்குழுவின் கட்டளைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி றாஜினி முத்துக்குமாரனுக்கு அரசசேவைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது....

கல்கோவன்,றுக்ஸ்மன் அதிரடி யாழ்.இந்து வரலாற்று வெற்றி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 433 ஓட்டங்கள் வித்தியாசத்தில் யூனியன் கல்லூரி அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. (more…)

நீதிமன்ற கட்டளையை சிவாஜிலிங்கம் மீறியதாக எவ்வாறு கேள்வி எழுப்ப முடியும்: ஸ்ரீகாந்தா வாதம்

நீதிமன்றத்தை அவமதித்து, நீதிமன்ற கட்டளையைக் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது சிவாஜிலிங்கம் சார்பாக என்.சிறிகாந்தா, எம்.றெமிடியஸ், என்.திருநாவுக்கரசு, வி.ரி. சிவலிங்கம், கே.பி.எஸ். வரதராஜா, ஏ. ராஜரெட்ணம், சர்மினி விக்னேஸ்வரன், எஸ். செலற்றின்,...

என்.ஆர்.எவ்.சி. மற்றும் ஆர்.எவ்.சி. கணக்கு விதிகளில் தளர்வு

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது. (more…)

யாழ். பொக்கணை மயானக் காணியை படையினருக்கு வழக்க முடியாதென வலி. கிழக்கு பிரதேச சபை தீர்மானம்

யாழ். ஊரெழு பொக்கணை மயானத்திற்குரிய நிலத்தை படையினருக்கு வழங்க முடியாதென, வலி. கிழக்கு பிரதேச சபை திட்டவட்டமாக மறுத்திருப்பதுடன், பிரதேச சபையின் எல்லைக்குள் படையினருக்கு நிலம் வழங்க கூடாதென தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.மேற்படி மயானத்திற்குரிய 130 ஏக்கர் பரப்பு நிலத்தினை தமது படைமுகாம் அமைப்புக்கென வழங்குமாறு இராணுவத்தினர், பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்நிலையில் குறித்த இடம்...

யாழில் வீடு வீடாக சென்று நிதி சேகரிக்கும் பௌத்த பிக்குகள்!

யாழ்,நகர் பகுதியில், பௌத்த பிக்குகள் சிலர் வீடுகளிற்கும், வர்த்தக நிலையங்களிற்கும் சென்று நிதி சேமிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.இதன்படி நேற்றையதினம், யாழ். கஸ்தூரியார் வீதி பகுதியில் முச்சக்கரவண்டி மூலம் நிதி சேமிப்பில் ஈடுபட்டு வந்த பிக்குகள் பார்ப்பதற்கு சந்தேகத்துக்கிடமான விதத்தில் காணப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும்,விகாரைகளில் தங்கியுள்ள ஏழைச் சிறுவர்களின் நலனுக்காக இவ்வாறு நிதி சேமிப்பில்...

யாழ்ப்பாணத்தில் முறைப்பாட்டு பெட்டிகள் அமைக்கத் தீர்மானம்

யாழ்ப்பாணத்தில் நகரை எவ்வாறு அபிவிருத்தி செய்ய வேண்டும் மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமது ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை மக்கள் சொல்லக் கூடிய வகையில் முறைப்பாட்டுப் பெட்டிகள் அமைக்கப்பட உள்ளன.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. (more…)

‘தமிழீழ எல்லாளன் படை’ எனும் தலைப்பில் வடமராட்சியில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் நெல்லியடி நகரப் பகுதியில் "தமிழீழ எல்லாளன் படை" தமிழீழம் என்ற பெயரில் இனந்தெரியாத நபர்களினால் துண்டுப்பிரசுரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் விடுமுறை என்பதால் சன நடமாட்டம் குறைவாக இருந்ததால் நகரத்தில் உள்ள பேரூந்து நிலையத்தில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. (more…)

யாழ். பல்கலை. மாணவர்களுடன் பிரித்தானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவப் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று யாழ். கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தினுடைய நிலவரம் தொடர்பாகவும், பல்கலைக்கழக நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி தொடர்பாகவும் மாணவப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டதாக தெரியவருகின்றது. (more…)

உதயன் நாளிதழுக்கெதிராக யாழ். நீதிவான் கணேசராஜா நடவடிக்கைகள், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடை!

உதயன் நாளிதழில் கடந்த மாதம் 28ஆம் திகதி வெளியான செய்தி ஒன்று தொடர்பில் "உதயன்" ஆசிரியர் ரி.பிரேமானந்துக்கு எதிராக யாழ். நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராஜா நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்ற விசாரணைகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கும், பிறேமானந்தைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு எதனையும் பிறப்பிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. (more…)

இராணுவத்தினர் தாக்கியதில் மதுபோதையில் இருந்தவர் மரணம்!

யாழ். தென்மராட்சியின் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியில் இராணுவ சிற்றுண்டிச்சாலையில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கும் இவரது சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் போதே இராணுவத்தினர் குறுக்கிட்டுள்ளனர். இதன்போது மது போதையிலிருந்த இவர் இராணுவச் சிப்பாய் ஒருவரை பலமாக தாக்கியுள்ளார்.இதன்போது ஒன்றுகூடிய இராணுவத்தினர் குறித்த நபரை சராமரியாகத் தாக்கியுள்ளனர். (more…)

யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கடிதம்!

உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரி மாணவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை தொடர்பாக, எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் ரீதியான தகுதி வாய்ந்த இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் தொழில் சங்கம் - யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.இலங்கை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகளுக்கு யாழ். மாவட்டத்தில் மட்டும்...

யாழ். பல்கலையில் 2 புதிய பீடாதிபதிகள் நியமனம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலை பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதனும் விவசாய பீட பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தனும் புதன்கிழமை(6) பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (more…)

சுமந்திரன் எம்பி, உதயன் ஆசிரியர் பிரேம்நாத் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பிரேம்நாத் ஆகியோர் மீது குற்றப்புலனாய்வு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் மா.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது குறித்து தான் பொலிஸ் மா அதிபருக்கும், யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக யாழ். நீதவான் மா.கணேசராஜா தெரிவித்தார் என இணையத்தளம்...

யாழ் மருத்துவர்கள் சங்கத்தின் பகிஷ்கரிப்புக்கு நீதிமன்றம் தடை

யாழ் மருத்துவர்கள் சங்கம் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்புக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.மேற்படி பகிஷ்கரிப்பை நிறுத்துமாறு பொலிஸார் தாக்கல் செய்த மனுவையடுத்து நீதவான் கணேசராசா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நோயாளர்கள் மற்றும் விபத்தில் காயமடைபவர்கள் பாதிக்கப்படலாம் என்பதாலும் இந்த ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமான ஆர்ப்பாட்டம் என தான் எனக் கருதுவதாலும் இந்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துமாறு யாழ் பொலிஸ்...

வவுனியா அரசியல் கைதிகளில் ஒருவர் அடித்துக்கொலை! ஒருவர் கோமா நிலையில்! பலரின் நிலை கவலைக்கிடம்:வெலிக்கடை படுகொலையினை ஞாபகமூட்டுகிறது

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.நிமலரூபன் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை வைத்தியசாலைக்கு ண்டுசெல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு ஆரம்பமாகியது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களது இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக ஊழியர்களும் தொடர்ச்சியான இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இங்கு கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன்...
Loading posts...

All posts loaded

No more posts