Ad Widget

HNDA, HNDM பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்; வியாழக்கிழமை முடிவு அறிவிக்ப்படும் – டக்ளஸ் உறுதியளிப்பு.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் HNDA, HNDM, பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் இன்று கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் இவர்களின் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது. (more…)

உதயன் பத்திரிகை ஆசிரியரை விளக்கம் கேட்டது நீதிமன்றம்!

நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு விதித்த நீதிமன்றத் தீர்ப்பில் திருத்தம் செய்யவேண்டும் என்று கூட்டமைப்பு மற்றும் விடுதலை முன்னணி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதி கணேசராஜா, தடையுத்தரவு சரியானதே என்று புதன்கிழமை தீர்ப்பளித்திருந்தார்...
Ad Widget

யாழ் மாவட்டத்தில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு திங்கள் நியமனம்!

பட்டதாரி பயிலுநர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கு கடந்த 5,6,7 ம்திகதிகளில் தோற்றிய பட்டதாரிகளில் 2011 டிசம்பா் மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகமாயின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் என சான்றிதழ் சமர்ப்பித்தவர்கள் அனைவருக்கும் பட்டதாரி பயிலுநர் நியமனக் கடிதங்கள் திங்கட்கிழமை(2-7-2012) காலை 9 மணிக்கு யாழ்...

வடமாகாணசபை தேர்தல் 2013 செப்ரெம்பரில் : அரசு தெரிவிப்பு

வடக்கு மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் செப்ரெம்பர் மாதம் நடத்தப்படுமென்று அரசு நேற்று தெரிவித்திருக்கிறது. நேற்றுக்காலை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனைச் சந்தித்தபோது, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ, அரசின் இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறார்.சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, வடக்கின் புனர்வாழ்வு, புனரமைப்பு, இந்திய வீடமைப்புத்...

பொலிஸாரின் விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை! பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்!- யாழ்.வைத்தியர் சங்கம்

யாழ். போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி என்.ஜெயக்குமாரனின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என அதனைக் கண்டித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் சங்கம் அறிவித்துள்ளது.வைத்தியர் வீட்டின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது....

நாடாளுமன்றில் கூறப்படும் விடயங்களை விமர்சிக்க நீதிமன்றுக்கு அதிகாரமில்லை-சுமந்திரன் எம்.பி.

நாடாளுமன்ற சிறப்புரிமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும் விடயங்களை விமர்சிப்பதற்கு நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை. அங்கு கூறும் கருத்துக்களை விமர்சனத்துக்கு உட்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத் தரணியுமான எம்.எ. சுமந்திரன் யாழ். நீதிமன்றில் நேற்றுச் சுட்டிக்காட்டினார். சுமந்திரன் நாடாளுமன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பில் நீதிவான் மா.கணேசராஜா தெரிவித்த விமர்சனம் குறித்தே அவர்...

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; மன்றில் ஆஜராகுமாறு சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பு

நீதிமன்றக் கட்டளையை வீதியில் கிழித்து எறிந்து, நீதிமன்றத்தை அவமதிப்புக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அரசியல் பிரிவுத் தலைவருமான சிவாஜிலிங்கத்திற்கு எதிராக யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இன்று புதன்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்றை தாக்கல் செய்தார். (more…)

ஆயுதக் கலாசாரத்தினை மீண்டும் முனைப்புடன் அரங்கேற்ற முயற்சி !யாழ். நீதிவான் மன்றில் தீர்ப்பில் கருத்து

தமிழ் மக்களின் நிலங்களை இராணுவத்தினர் அபகரிப்பதை எதிர்த்துத் தமிழ்த் தேசிய முன்னணியால் யாழ். நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம், ஜனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் மீண்டும் முனைப்புடன் அரங்கேற்றும் முயற்சி என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்று தெரிவித்துள்ளது.இந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்துக்கு பொலிஸார் யாழ். நீதிவான் மன்றிடமிருந்து தடையுத்தரவு பெற்றிருந்தனர். இந்தத்...

வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு, நேற்று உத்தரவிட்டார் கல்வி அமைச்சர்

பதவியைப் பொறுப்பேற்கையில் யாராவது குழப்பம் விளைவித்தால் அல்லது பதவியைப் பொறுப்பேற்க விடாது தடுத்தால் கல்வித் திணைக்கள அதிகாரிகளின் உதவியை உடன் நாடி பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.கோத்தபாய ஜெயரட்னே புதிய அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபராக வேணுகா சண்முகரத்தினம், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார். நேர்முகப் பரீட்சைகளின் பின்னர் இந்த...

வாக்காளர் பதிவுப் பட்டியல் இணையத்தில் இணைக்கப்படும்

வாக்காளர் பதிவுப் பட்டியலில் தமது பெயர் உள்ளதா என்பதை இணையத்தின் மூலமாக பரீட்சிப்பதற்கு ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்குப் பின் இலங்கை வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.இலங்கை வாக்காளர் பதிவுப்பட்டியல் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இறுதியாக பூர்த்தியாக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப்...

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

கடந்த 6ம் திகதி தொடக்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று தமது பணிப்பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளனத்திற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (26) இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (more…)

நேற்று முதல் பிரபல தமிழ் இணையத்தளங்கள் இலங்கையில் தடை!

நேற்று முதல் வெளிநாடுகளினை தளமாகக்கொண்டு புலம்பெயார் தமிழர்களால் நடாத்தப்படும் பிரபல தமிழ் இணையத்தளங்களான LankaSri.com Tamilwin.com Ponguthamil.com Athirvu.com Saritham.com Pathivu.com sankathi.com ஆகியன இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன.இனி இச்செய்தித்தளங்களினை இலங்கையின் இணைய சேவை நிறுவனங்களின் சேவை பெற்ற எவராலும் தமது கணினிகளில் சாதாரணமாக பார்வையிட முடியாது. ஏற்கனவே புலம்பெயர்ந்த சிங்களவர்களால் நடாத்தப்பட்ட பல(lankaenews ,lankanewsweb,srilankaguardian) இணையத்தளங்கள்...

கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்பாக உயர்கல்வி அமைச்சு, திறைசேரி மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு அவசர தேவை உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ச்சியான பேச்சுவார்த்தை அவசியம் எனவும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறினார். (more…)

2011 (உ/த) பரீட்சை வெட்டுப்புள்ளி பட்டியலை ரத்துச் செய்து பழைய, புதிய பாடத் திட்டங்களுக்கு இஸட் புள்ளி பட்டியலை தயாரிக்க உத்தரவு

2011ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பாக வெளியிடப்பட்ட இஸட் புள்ளி பட்டியலை இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிபர முறைமைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் , பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு தனித்தனியாக இஸட் புள்ளி பட்டியல்களை மீண்டும் கணிப்பீடு செய்து வெளியிடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது....

பலாலி விமான நிலையப் பணியும் பறிபோகும் நிலையில்..! இந்தியாவை ஓரம்கட்டும் இலங்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்று இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்தியா உதவ முன்வந்தது.மேலதிகமாக பலாலி விமான நிலையத்தை நவீன மயப்படுத்த உதவுவதாகவும் இந்தியா உறுதியளித்திருந்தது....

யாழ்ப்பாண மக்களிடம் சிங்கள இரத்தம் தான் ஓடுகிறது: யாழ்.படைத்தளபதி

பெரும்பாலான யாழ்ப்பாண மக்களில் ஓடுவது சிங்களவர்களின் இரத்தம் தான் என்று இலங்கை இராணுவத்தின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.“யாழ்.போதனா மருத்துவமனை இரத்த வங்கிக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்பவர்கள் படையினரே. ஒவ்வொரு மாதமும் இராணுவம், இரத்ததான முகாம்களை...

யாழ். பிறிமியர் லீக் போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக்கழகம் வெற்றி

யாழ். பிரிமியர் லீக் (ஜேபிஎல்) போட்டியில் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்ரலைட்ஸ் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரலைட்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து...

மயிலிட்டி கிராம மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் சென்று மீளக்குடியமரப் போவதாக அறிவிப்பு

வலிகாமம் வடக்கிலுள்ள மயிலிட்டி பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளுக்கு வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு மீளக்குடியமரப் போவதாக இடம்பெயர்ந்த மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இடம்பெயர்ந்த மக்களை நேற்று நேரில் சந்தித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியிடமே மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதுடன் அதற்கு தமது பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உதவியையும் கோரியுள்ளனர். (more…)

கிராம அலுவலர்கள் மாலை 4.15 வரை கடமையாற்ற அறிவுறுத்தல்!

கிராம அலுவலர்கள் நாளாந்தம் மாலை 4.15 மணிவரை தமது அலுவலகத்தில் கடமையாற்ற வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சில் இடம் பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து யாழ். மாவட்ட அரச அதிபர் சுற்றறிக்கை மூலம் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் அலுவலகங்களுக்கு இந்த...

பல்கலை கல்வி சாரா ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்கிறது ! தொடர்ந்தால் புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிவரும் அரசு மிரட்டல்?

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் 20 ஆவது நாளாக நாளையும் தொடருமென பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று தெரிவித்தது. இதேவேளை தொழில் ஆணையாளர் முன்னிலையில் நாளை 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்தது. நேற்று முன்தினம் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பல்கலைக்கழக மானியங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts