மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணை- பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி தெரிவித்தார்."கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் இருமாணவர்களின் பெயர் விவரங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. (more…)

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் நள்ளிரவில் கைது

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான ப.தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று அவரது தாயார் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது: "நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்துவிட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக...
Ad Widget

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள போராட்டத்தில்

நீங்கள் அடிப்பது ; நாங்கள் ஓடுவது இதுதான் எங்கள் தலைவிதியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்; மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீது படையினரும் பொலிஸாரும் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய அநாகரியச் செயல். இத்தகைய செயல்களில் படைத்தரப்பினர் ஈடுபடுவதை அவர்களுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் அனுமதிக்கலாகாது. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற-அதனைத் தடை செய்கின்ற அதிகாரம் பொலிஸாருக்கு உண்டென்பதை மறுப்பது எமது நோக்கமல்ல. (more…)

பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில்அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றது.நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் தற்போது செயற்பட்டு...

கடந்த காலத்திற்கு செல்ல அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றதா?: மனோ கணேசன்

வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மூலம் மீண்டும் கடந்த காலத்திற்கு அழைப்பு விடுக்கின்றதா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.வடக்கில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

யாழ் பல்கலை மனிதவுரிமை மீறல் – (மேலும் செய்திகள்)

யாழ். பல்கலைக்கழகச் சூழலில் நேற்றுக் காலை ( 28.11.2012 ) படையினரும் பொலிஸாரும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களை கலைத்துக் கலைத்து மிலேச்சத்தனமாகத் தாக்கி அட்டகாசம் புரிந்தனர்.இந்த அராஜகத்தால் பல்கலைக்கழக மாணவிகள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (more…)

அசோகவனத்துச் சீதை புத்திசாலியாக இருந்தாள்

இராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள். அவளைச் சுற்றி அசுரர் கூட்டம். கூடவே வேல், அம்பு, ஈட்டி என்ற ஆயுதங்களையும் அவர்கள் தரித்திருத்தனர். திரிசடை என்பாளைத் தவிர மற்றெல்லோரும் சீதையைப் பயமுறுத்துபவர்களே. (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கலவரத்தினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது. (more…)

பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதல்,கைது,வாகனம் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் சரவணபவன் எம்.பி.ஊடகங்களுக்கு விளக்கம்

பல்கலைக்கழகத்தில் படையினர் வெறியாட்டம்! – மாணவர்கள் மீது தாக்குதல்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் சுடரேற்றம்!.

சரவணபவன் எம்.பி மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதுதாக்குதல்!

யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி  தெரிவித்தார். (more…)

தைமாதம் 1ம் திகதி சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்! அடைக்கலநாதன் எம்.பி அறிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு எதிர்வரும் 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்தினால் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  (more…)

அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு-அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அரசகரும மொழிக்கொள்கையை மீறியுள்ள 75 அரச நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏனைய அரச நிறுவனங்கள் பற்றிய தகவல்களை திரட்டிவருவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஆர் ரணவக்க தெரிவித்துள்ளார். (more…)

இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கைநெறி

யாழ் பல்கலைக்கழகத்தின் இணையத்தின் ஊடான தமிழ் மொழி மூலமான வியாபார முகாமைத்துவமாணி பட்டக்கற்கை நெறி புதிய பிரிவுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது இதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி 28.12.2012  ஆகும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள்  வணிக பீடமானது முகாமைத்துவமாணிக்  கற்கை நெறியை  Bachelor of Business Management (BBM)  நடாத்துகின்றது. (more…)

இலங்கையின் செயற்கைக்கோள் விண்ணுக்கு!

இலங்கையின் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில்...

யாழ் பல்கலைக்கழகத்தில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடை!

யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளக வலைப்பின்னல் ஊடான இணைய இணைப்பில் FaceBook மற்றும் Youtube சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் Youtube மாத்திரம் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் FaceBook இன்று முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. (more…)

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்! வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் விசாரணைக்கு அனுமதி

இலங்கையின் வடக்கே பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு அரசதரப்பு முன்வைத்த ஆட்சேபனையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. (more…)

யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவன் அவுஸ்திரேலியாவில் சாதனை

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் இரத்தினசிங்கம் செந்தூரன் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில், உயரம் பாய்தலில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகர், அல்பேர்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தினைப் பெற்றுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts