யாழ். – கொழும்பு சேவையில் ஈடுபடும் பெருமளவான பஸ்கள் பணி நிறுத்தம்!

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் சேவையில் ஈடுபடும் பெருமளவான தனியார் சொகுசு பஸ்கள் நேற்று சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனியார் பஸ் சாரதிகள் சிலர் நேற்று அதிகாலை வத்தளைப் பிரதேசத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிசோதகர்களினால் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், இதனைக் கண்டித்தே சேவை நிறுத்தத்தில் ஈடுபட்டதாகவும் யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது, (more…)

நெடுந்தீவு குமுதினிப் படகு பணியாளர் ஒருவர் மீது இலங்கை கடற்படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்!

நெடுந்தீவு குமுதினிப் படகு பணியாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினருடைய மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். இச் சம்வம் நேற்று காலை குறிகாட்டுவான் இறங்கு துறையில் இடம்பெற்றுள்ளது.நெடுந்தீவு 13 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.பாலசிங்கம் (வயது 64) என்னும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினிப் படகுக் பணியாளரே மேற்படிச் சம்பத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர் ஆவர். (more…)
Ad Widget

வெலிக்கடைச் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்வு

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைக்கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதன் அடிப்படையில் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 43க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளா அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். (more…)

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணினிப் பயிற்சி

இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கணனிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கணனி பயிற்சி வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளை செயற்திறனாக மேற்கொள்ள முடியும். கணனிப் பயிற்சிகளுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். (more…)

2013ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்

2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதம் நாடாளுமன்றில் ஆரம்பமாகியது. இதன் போது அடுத்த ஆண்டு நடைமுறைப்டுத்தப்படவுள்ள திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். (more…)

கண்டு பிடிப்பாளர் தேடல்- 2012 கண்காட்சி

இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டுபிடிப்பாளர் தேடல் -2012 எனும் கருப்பொருளைக் கொண்ட கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றது. யாழ். மாவட்டத்தில் இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கண்டு பிடிப்பாளர் தேடல் - 2012 எனும் கருப்பொருளிலான கண்காட்சி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் எலைற்றின் நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர்...

வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட்சிப்பீடமேறும்.- அமைச்சர்கள் அச்சம்!

”வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட்சிப்பீடமேறும். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் நாட்டில் சட்டங்களை அமுல்படுத்த முடியாத நிலை அரசுக்கு ஏற்படும். இந்த விடயத்தில் அரசுக்கு வடமாகாண சபை சிம்ம சொப்பனமாகத் திகழும். எனவே, வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவே கூடாது.''இவ்வாறு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

யாழ்.போதனா வைத்தியசாலை 450 தாதியர்களுடன் இயங்கிறது-பணிப்பாளர் தகவல்

போதிய தாதிய வளம் இன்றியே யாழ்.போதனா வைத்தியசாலை செயற்பட்டு வருவதாக பணிப்பாளர் டாக்டர் எஸ்.பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கை மற்றும் சர்வ மதக்குழுவிடமே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 1500 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது 450 தாதியர்களே பணியாற்றுகின்றனர். (more…)

யாழ். – கொழும்பு தனியார் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்! பயணிகள் பாதிப்பு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது புத்தளத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பேருந்தின் ஒரு பக்கக் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்நாள் திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தெய்வாதீனமாக பயணிகள் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. (more…)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றி

அமெரிக்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது தடவையாகவும் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை வெளியான முடிவுகளின்படி பராக் ஒபாமா 301 வாக்குகளைபயும் மிட் றொம்னி 206 வாக்குகளையும் பெற்றுள்ளனர். (more…)

யாழ். பல்கலை ஊழியர் நியமனங்களை உயர்கல்வி அமைச்சு நிறுத்தவில்லை!

யாழ். பல்கலைக்கழகத்திற்கெனத் தெரிவு செய்யப்பட்ட கல்விசாரா ஊழியர்கள் 39 பேரின் நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வி அமைச்சு ஒருபோதும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன. (more…)

வடமாகாண ஆளுநர் கருத்து சபையின் அங்கீகாரம் ஆகாது – உயர் நீதிமன்றம்

"திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது. (more…)

மாணவியை சேஷ்டை செய்த சிங்கள இளைஞர்கள்!- தட்டிக்கேட்டவர்களை அடித்து விரட்டிய பொலிஸ்

தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவியொருவருடைய மேல் ஆடைக்குள்ளே கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை எழுதிப் போட்ட சிங்கள இளைஞர்களைத் தட்டிக்கேட்ட தமிழ் இளைஞர்களைப் சாவகச்சேரிப் பொலிஸார் அடித்து அதட்டியுள்ளனர்.இச்சம்பவம் இன்று 8 மணியளவில் யாழ். கைதடிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது. (more…)

த.தே.கூ. எம்.பி.க்களை தண்ணீர் போத்தலால் தாக்க முயற்சித்த சந்திரகுமார் எம்.பி

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு விசேட கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர்கள் மீது ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், தண்ணீர்ப் போத்தல்களால் தாக்க முற்பட்டதை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து, இது...

யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது

யாழ்.மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.இதில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வரவேற்புரை நிகழ்த்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகிகோர் கூட்டத்துக்கு இணைத்தலைமை தாங்கினார்கள். (more…)

யாழ். நூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் சீனமொழி

யாழ். பொதுநூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் வரலாற்றில் முதல் முறையாக சீன மொழியிலான அபிப்பிராயம் ஒன்று நேற்றுபதியப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் போது யாழ். பொது நூலகத்தினைப் பார்வையிட்டனர். (more…)

ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடப்படும்: பரீட்சைத் திணைக்களம்

எதிர்வரும் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. (more…)

பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக ஞானபிரகாசம்

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான ஐய்யாதுரை ஞானபிரகாசம் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வருடங்களாக கடமையாற்றும் இவர் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் இன்று முடங்கியது

சம்பள அதிகரிப்பு உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணிவரை இடம்பெறும் என அரச மருத்துவ சங்கத்தினர் யாழ். மாவட்டத்திற்கான தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார் (more…)

வடமாகாண சபை அமைந்தால் தனி நாட்டுப் பிரகடனம் உறுதி என்கிறார் மேத்தானந்த தேரர்

வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts