காணாமல்போனோர் பற்றிய கடந்தகால விசாரணைகள் தொடர்பில் ஐநாவுக்கு அறிக்கை

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் சிஎச்ஆர்டி எனப்படும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐநாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்திருக்கின்றது என பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறல் விடயத்தில் ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள...

திருகோணமலையில் 07ம் திகதி திங்கட்கிழமை பி.ப 3.00 மணிக்கு கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்த சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றின் ஊடாகவே விசாரணை நடாத்தப்படல் வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், எந்த வடிவிலானதொரு உள்ளக பொறிமுறை மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பதனை வெளிப்படுத்தியும் இவற்றினை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்...
Ad Widget

சர்வதேச விசாரணை முடிவடைந்தமை நீதியரசருக்கு புரியாதிருந்தால் அது ஆச்சரியம் ! – மாவை

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை மீது வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக தேர்தல் அறிக்கைக்கு மாறான கருத்தையே தெரிவித்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தோற்கடிக்கப்படவேண்டும் என்ற வகையில் அவரின் கருத்து அமைந்திருந்தது என்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அவரை...

மக்கள் ஆர்வமாக வரலாற்றுக்கடமையில்! கையெழுத்து போராட்டத்தில்…

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்கிறது கையெழுத்து வேட்டை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து...

அமைச்சரவை அதிகரிப்பு பிரேரணைக்கு எதிர்கட்சி நடுநிலை!

19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக 30 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதாயின் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்நிலையில் இதுதொடர்பில் 3ம்திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மீதான வாக்களிப்பில்  தமிழ் அரசு கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். முன்னதாக இது பற்றி எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது ”அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு...

பதில் எதிர்க்கட்சி தலைவராக மாவை!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக்குழு எதிர்கட்சியின் பிரதமகொறடா பதவியை மக்கள் விடுதலை முன்னணியிற்கு கையளிக்க தீர்மானம் எடுத்திருக்கின்றது. இதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மக்கள் விடுதலை முன்னணியின்  அநுரகுமார திஸாநாயக்கவை பிரேரிப்பதாக கதாநாயகரிடம் கூறியுள்ளார்.  இரா.சம்பந்தன் வருகை தராத சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரான மாவை...

கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது ! – சுரேஸ் பிறேமச்சந்திரன்!!

நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையென தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளினில் ஈடுபடவேண்டாமென தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையிடம் சுரேஸ்பிறேமச்சந்திரன் கோரியுள்ளார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையெனவும் இனி சர்வதேச விசாரணை பற்றி கதைக்க வேண்டியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டு மக்களினை குழப்பும் நடவடிக்கையாகும். அதே கருத்தினை தான் கட்சி தலைவரான சம்பந்தனும்...

சர்வதேச நீதி வேண்டி மக்கள் செயற்பாட்டு அமைப்பு உதயம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறையினை வலியுறுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் சம்பந்தமாக வெகுஜன அமைப்புகள் மக்கள் பிரதிநிதிகள் பல்கலைக்கழக சமூகம் ,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் திருநெல்வேலியில் இன்று (2) மாலை இடம்பெற்றது. கலந்துகொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட...

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்- செல்வம்

பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின்...

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் வழக்கு முடிவுக்கு வந்தது

வடமாகாணக்கல்வி அமைச்சினால் யாழ் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது எனினும் தற்போது அதிபராக கடமையாற்றும் திரு.நா. மகேந்திரராஜா அண்மைய வருடங்களிலேயே அதிராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் கல்வி அமைச்சினால் அந்நியமனம் தவறானது என கருதி மீளவும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இவ்விளம்பரத்தினை ஆட்சேபித்து இந்து ஆரம்பபாடசாலை...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக சுமந்திரன் நியமனம் !சுரேஸ் அவுட்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று (1.09.2015) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கௌரவ. இரா. சம்பந்தன் அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், கௌரவ சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் தமிழ்த் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ. செல்வம்...

சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் – விக்னேஸ்வரன் பிரேரணை

இன அழிப்பு தொடர்பிலான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்றினை கோரி வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது. இறுதி போரின் போது இலங்கை அரச படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை முன்னெடுத்திருந்தார். வடமாகாண சபை அமர்வுகள் இன்று காலை...

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில்போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

இலங்கையின் இறுதிப்போரில் அடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்புவிடுத்துள்ளது. இந்த தொடர்ச்சியான போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகைளையும் பொதுஜன அமைப்புக்களையும் மக்களையும் இணந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நாளை(2) முக்கிய கூட்டம் ஒன்றை அனைத்து தரப்பினருடனும் ஏற்பாடு செய்துள்ளனர்...

உள்ளக விசாரணை நடைபெறுமானால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

ததேகூ இணைப்புக் குழுவைக் கூட்டுமாறு தமிழரசுக் கட்சிக்கு அழுத்தம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கொழும்பில் இன்று கூடிய அந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன என பிபிசி  தமிழ் செய்திகள் தெரிவிக்கின்றது . நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசிய பட்டியல் இடங்களுக்கான...

ஓமந்தை சோதனைச் சாவடி அகற்றப்பட்டது!சோதனைகள் முற்றாக நிறுத்தம்

ஏ-9 வீதியின் ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1997ஆம் ஆண்டு ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைத்திரி பால சிறிசேன பதவியெற்ற பின்னர் பயணிகள் சோதனை  தளர்த்தப்பட்டு...

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கவேண்டும்! -தமிழரசுக்கட்சி கோரிக்கை!

நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியே எதிர்க்கட்சிகளில் இப்போது கூடியளவு ஆசனங்களுள்ள அரசியல் கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை எட்ட அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் உண்மையான உறுதி இருந்தால், தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க...

உள்ளக விசாரணையில் ‘கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை’ – வழக்கறிஞர் கே.எஸ். இரட்ணவேல்

இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...

விசாரணை ஐநா மட்டத்தில் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்

உள்ளக விசாரணை என்பது ஒரு சிலருக்கு தண்டனை கொடுப்பதுடன் முடிந்து விடும். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வராது. ஆகவே இந்த விசாரணை சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற...
Loading posts...

All posts loaded

No more posts